Monday, December 13, 2010

Evolution St(he)ory > Harry Potter Stories - VII



உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.


பூச்சிகளின் தோற்றம் (ORIGIN OF INSECTS):

பரிணாமம் என்பது பரிணாமவியலாளர்களின் கற்பனையில் மட்டுமே நடந்திருக்க வேண்டுமென்பதற்கு பூச்சிகளும் ஒரு உதாரணம்.  

நம் அன்றாட வாழ்வில் பின்னி பிணைந்திருக்கும் உயிரினங்களான பூச்சிகள் பரிணாமவியலாளர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து கொண்டிருக்கின்றன.

பூச்சிகளில் (கரையான்கள், ஈக்கள், எறும்புகள், கரப்பான்கள், தும்பிகள், தேனீக்கள் etc) லட்சக்கணக்கான வகைகள் உண்டு. சுமார் 6-10 மில்லியன் (1 மில்லியன் = 10 லட்சம்) வகையான பூச்சிகள் தற்காலத்தில் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து சூழ்நிலைகளிலும் வசிக்கும் தன்மையுடையவை பூச்சிகள்.

1. இந்த பூச்சிகள் எப்படி தோன்றின? 
2. எந்த உயிரினத்திலிருந்து இவை பரிணாமம் அடைந்து வந்தன? 
3. இவைகளில் ஒரு வகையான, பறக்கும் பூச்சிகள் எப்படி வந்திருக்கும்? 
4. அவைகளின் இறக்கைகளின் பின்னணி என்ன? எப்படி அவை பறக்கும் தகுதியை பெற்றன?

இவையெல்லாம் பரிணாமவியலாளர்கள் முன்பு இருக்கும் மில்லியன் டாலர் கேள்விகள். எப்படி பரிணாமத்தின் மற்ற யூகங்களுக்கு ஆதாரங்கள் இல்லையோ அது போலவே இவைகளுக்கும் ஆதாரங்கள் இல்லை.

பதிவிற்கு தேவைப்படும் என்பதால், இந்த தொடரின் மூன்றாம் பதிவில் நாம் பார்த்ததை சற்று நினைவுப்படுத்தி கொள்வோம். அதாவது, சுமார் 500-550 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான உயிரினப்படிமங்களில் (fossils) முதன் முதலாக காணப்படும் உயிரினங்கள் திடீரென தோன்றியிருக்கின்றன. இவை பரிணாமம் என்ற ஒன்றை கடந்து வரவில்லை.

ஆக, இதுவரை நம்மிடமுள்ள ஆதாரங்களின் படி, உயிரினப்படிமங்களில் முதன் முதலாக காணப்படும் உயிரினங்கள் ஏற்கனவே முன்னேறிய நிலையில் இருக்கின்றன.

இதே போன்றதொரு நிலைமைதான் பூச்சிகளுக்கும்.

ஆம், அவைகளும் முதன் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படும் போதே முன்னேறிய நிலையில் இருக்கின்றன. சுமார் 400-300 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பூச்சிகளின் உயிரினப்படிமங்கள் காணக்கிடைக்கின்றன. அவைகளில் பூச்சிகள் முன்னேறிய நிலையிலேயே இருக்கின்றன.


1. பூச்சிகள் எப்படி தோன்றின? எந்த உயிரினத்திலிருந்து படிப்படியாக மாறி வந்தன?

பரிணாமவியலாளர்களுக்கு இது இன்னும் தெளிவாகவில்லை.

"Insects are the most diverse lineage of all life in numbers of species, and ecologically they dominate terrestrial ecosystems. However, how and when this immense radiation of animals originated is unclear" --- New light shed on the oldest insect, Michael S. Engel & David A. Grimaldi, Nature Journal, 427, 627-630 (12 February 2004), doi:10.1038/nature02291.
இவ்வுலகில் உள்ள உயிரினங்களில் மிக அதிகமான வெவ்வேறு இனங்களை கொண்டவை பூச்சிகள். எனினும், இவை எப்படி தோன்றின, என்று தோன்றின என்பது தெளிவாகவில்லை --- (Extract from the original quote of) New light shed on the oldest insect, Michael S. Engel & David A. Grimaldi, Nature Journal, 427, 627-630 (12 February 2004), doi:10.1038/nature02291.    

ஏன் தெளிவாகவில்லை? பதில் எளிதானதுதான். இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள பழமையாக உயிரினப்படிமங்களில் காணப்படும் பூச்சிகள் யாவும் ஏற்கனவே நன்கு முன்னேறிய நிலையில் உள்ளன. பரிணாமவியலாளர்கள் எதிர்ப்பார்க்ககூடிய, சிறுகச் சிறுக வளர்ந்திருக்க கூடிய நிலையில் (Transitional Fossils) எதுவுமே இல்லை.  

இது வரை நாமறிந்த உலகின் மிக பழமையான பூச்சி என்றால் அது Rhyniognatha hirsti என்ற ஒன்றாகும். இது சுமார் 400-410 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த ஆதிகால பூச்சி நன்கு முன்னேறிய தன்மைகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது.
 
 
பரிணாமத்தின்படி படிப்படியாகத் தான் ஒரு உயிரினம் தோன்றியிருக்க வேண்டுமென்பதால், நாம் மேலே பார்த்த பூச்சிக்கு முன்னரே பூச்சிகள் உருவாகியிருக்க வேண்டுமென்று கருதுகின்றார்கள் பரிணாமவியலாளர்கள்.

"The oldest known fossil insect is currently Rhyniognatha hirsti from the early Devonian Rhynie chert of scotland. However, this species, preserved in sinter from an ancient hot water spring active between 400 and 412 million years ago, exhibits some advanced characteristics implying that there are more primitive, older insects still to be dicovered" --- Paul D. Taylor & David N. Lewis, Fossil Invertebrates, Harvard University Press, 2007, p.160.  
நமக்கு தெரிந்த பழமையான பூச்சியின் படிமம் Rhyniognatha hirsti என்ற டெவோனியன் காலத்திய பூச்சியினுடையது. 400-412 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இது, சில முன்னேறிய தன்மைகளை கொண்டிருக்கின்றது. ஆகையால், இவற்றிற்கு முன்பு வாழ்ந்திருக்க கூடிய தொடக்க நிலை பூச்சிகள் இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருக்கின்றது --- (Extract from the original quote of) Paul D. Taylor & David N. Lewis, Fossil Invertebrates, Harvard University Press, 2007, p.160.  

உயிரின படிமங்கள் மூலம் நமக்கு தெரிய வரும் மற்றொரு பழமையான பூச்சி "bristletails" என அழைக்கப்படும் ஒன்றாகும்.  இதுவும் டெவோனியன் (410-360 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய) காலத்தை சேர்ந்ததுதான்.

The oldest known insect fossil for which there is significant remaining structure (head and thorax fragments) is a bristletail (Archaeognatha), estimated to be 390 to 392 million years old --- Archaeognatha, Encyclopedia Britannica.

உயிரினப்படிமம் மூலமாக நாமறிந்த மிக பழமையான பூச்சி Bristletail. 390-392 ஆண்டுகளுக்கு முந்தைய இவற்றில் குறிப்பிடடத்தக்க மிச்சங்கள் தென்படுகின்றன (தலை மற்றும் மார்பு கூடு பகுதிகள்) --- (Extract from the original quote of) Archaeognatha, Encyclopedia Britannica.                                     

எப்படி பழமையான உயிரினப்படிமங்களில் முதன் முதலாக காணப்படும் உயிரினங்கள் எந்த பரிணாம வரலாறும் இல்லாமல் திடீரென தோன்றியிருக்கின்றனவோ அதுபோலவே பூச்சிகளும் தோன்றியிருக்கின்றன.   

பூச்சிகள் எப்படி தோன்றியிருக்கும் என்பதை பற்றிய தெளிவு  பரிணாமவியலாளர்களிடையே இல்லையென்றாலும்  சில யூகங்கள் (Hypothesis) உண்டு, இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்று.

ஆக, பூச்சிகளின் தோற்றம் குறித்து பரிணாமவியலாளர்களிடையே குழப்பமே மிஞ்சுகின்றது.


2. பறக்கும் பூச்சிகள் எப்படி வந்தன?

பரிணாமவியலாளர்களுக்கு இன்னும் அதிக குழப்பத்தை தரும் கேள்வி இது.

ஏன்?, முதுகெலும்பில்லாத உயிரினங்களில் பறக்கக்கூடிய தன்மையை கொண்டிருப்பவை பூச்சிகள். மிகப் பழமையான உயிரினப்படிமங்களில் காணப்படும் இறக்கையுடைய பூச்சிகள், முதன் முதலாக காணப்படும்போதே பறக்கும் தன்மையை கொண்டிருந்திருக்கின்றன.

"The origins of insect flight remain obscure, since the earliest winged insects currently known appear to have been capable fliers" --- Wikipedia.       
பூச்சிகளின் பறக்கும் தன்மை எப்படி தோன்றியிருக்கும் என்பது தெளிவாகவில்லை, ஏனென்றால், தற்போது நாமறிந்திருக்கும் தகவலின்படி, ஆரம்ப கால இறக்கையுடைய பூச்சிகள் பறப்பதற்குரிய தகுதியை கொண்டிருப்பதாக தெரிகின்றது --- (Extract from the original quote of) Wikipedia.

நாம் மேலே  பார்த்த Rhyniognatha hirsti பூச்சியில் நடத்தப்பட்ட ஆய்வுகள், அவை பறக்கக்கூடிய தன்மையை கொண்டிருந்ததாக தெரிவிக்கின்றன. ஆக, நாமறிந்த 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய முதல் பூச்சியே பறக்கும் தன்மையை கொண்டிருந்திருக்கின்றது.

"Engel and Grimaldi found that the mandibles of Rhyniognatha hirsti have two points of articulation (dicondylic) which is only known in true insects: silverfish (Zygentoma) and winged insects (Pterygota). The form of the mandibles is more like that of winged insects than silverfish. Although there is no evidence of wings preserved in the Rhynie Chert, the advanced form of the mandibles of Rhyniognatha indicates that it could have been winged. This is very important as the oldest known fossils of flying insects are 320 million years old; the presence of true insects as far back as 400 million years ago indicates that wings may have evolved much earlier" --- The oldest fossil insect in the world - Natural History Museum, London.

Rhyniognatha hirstiயின் கீழ்த்தாடைகளில் உள்ள இரண்டு மூட்டமைப்பு புள்ளிகள், முழுமையான பூச்சிகளான silverfish (ஒரு வகையான பூச்சி) மற்றும் பறக்கும் பூச்சிகளுக்கு இருப்பது போன்று இருப்பதாக Engel மற்றும் Grimaldi கண்டறிந்துள்ளனர். கீழ்த்தாடையின் வடிவம் silverfishயை காட்டிலும் பறக்கும் பூச்சிகளையே ஒத்திருக்கின்றது. இந்த உயிரினத்தின் இறக்கைகள் படிமத்தில் பதப்படுத்தபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்றாலும் இவற்றின் முன்னேறிய கீழ்த்தாடைகள் இவற்றிற்கு இறக்கைகள் இருந்திருக்க வேண்டுமென்று தெரிவிக்கின்றன. இது மிக முக்கியமானது, ஏனென்றால் இதுவரை நாமறிந்த பழமையான பறக்கும் பூச்சிகள் 320 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை. ஆக, 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உண்மையான பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளது,  இறக்கைகள் இதற்கு முன்னமே பரிணாமம் அடைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றன --- (Extract from the original quote of) The oldest fossil insect in the world - Natural History Museum, London.  

சுமார் 300 மில்லியன் ஆண்டுகள் பழமையான பூச்சி முழுமையான அளவில் பதிந்திருக்க கூடிய உயிரினப்படிமம் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்த பூச்சியும் நன்கு பறக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது.


பறப்பது என்பது நிச்சயம் சாதாரண விஷயம் கிடையாது. பல அற்புத தன்மைகளை தன்னகத்தே கொண்டவை பறக்கும் பூச்சிகள். உதாரணத்துக்கு, நாம், நம் இரு கைகளையும் நீட்டி பூச்சிகளின் இறக்கைகளை போல ஆட்டி அசைத்தால் சில நிமிடங்களிலேயே சோர்ந்து விடுவோம். ஆனால் பூச்சிகளோ, ஒரு நொடிக்கு, சுமார் 200-1000 முறை தங்களுடைய இறக்கைகளை ஆட்டி அசைக்கின்றன. ஆனால் அந்த சோர்வை சமாளிக்க கூடிய அளவு அவற்றின் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

Flight is energetically very costly, and the metabolism of winged insects represents an extreme of physiological design among all animals --- "The biomechanics of insect flight: form, function, evolution", Robert Dudley, Princeton University Press, 2000, p.159.   

பறப்பதென்பது சக்தி ரீதியாக  மிக காஸ்ட்லியானது. அதுமட்டுமல்லாமல், உலகில் உள்ள அனைத்து உயிரினங்களை காட்டிலும் பறக்கும் பூச்சிகளின் உடல் வடிவமைப்பு விதிவிலக்கானது ---- "The biomechanics of insect flight: form, function, evolution", Robert Dudley, Princeton University Press, 2000, p.159.

இன்று வரை கூட, இவற்றின் பறக்கும் திறனுடன் மனிதனால் போட்டி போட முடியவில்லை. பூச்சிகள் அந்த அளவு அதி அற்புதமான பறக்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றன. இன்றளவும் நம்மால் போட்டி போட முடியாத அற்புத பறக்கும் தன்மை பூச்சிகளுக்கு தற்செயலாக வந்து விட்டது என்று சிலர் கூறுவார்கள். சரி அவர்கள் எதையாவது சொல்லிக்கொள்ளட்டும். ஆனால் இதற்கு ஆதாரம் என்று ஒன்றுமில்லை.  

உலகின் முதல் பறவை சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது பரிணாமவியலாளர்களின் எண்ணம். ஆனால் அதற்கு 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே பறக்கும் தன்மையை பூச்சிகள் பெற்றிந்திருக்கின்றன.

பூச்சிகளுக்கு இறக்கைகள் எப்படி வந்தன என்பது வெளிவாகவில்லை என்றாலும், இது பற்றிய யூகங்கள் உண்டு. உதாரணத்துக்கு பின்வரும் யூகம் (தமிழில் மொழிப்பெயர்ப்பதில் சிரமங்கள் இருப்பதால் ஆங்கில கருத்து மட்டுமே கொடுக்கப்படுகின்றது),

"Unfortunately, the fragmentary insect fossil record sheds little light on the origin of flight, as the oldest winged insects already have fully-formed wings. It has been hypothesised that wings originated from flaps that helped animals to land right side-up when jumping or blown by the wind. Enlargement of these flaps into proto-wings may have occured as an adaptation for effective parachuting or gliding from tall plants" --- Paul D. Taylor & David N. Lewis, Fossil Invertebrates, Harvard University Press, 2007, p.160.

ஆக, பூச்சிகளின் தோற்றத்திற்கும் சரி, அவைகளின் பறக்கும் தன்மைக்கும் சரி ஆதாரங்களில்லை.  

3. சரி, எந்த உயிரினத்திற்கு இறக்கைகள் முளைத்து அவை பறக்கும் பூச்சிகளாக மாறியிருக்கும்?

இது மற்றுமொரு விடை தெரியாத கேள்வி. எந்த உயிரினத்திற்கு இறக்கை முளைத்து பறக்கும் பூச்சியாக மாறியிருக்கும் என்பதும் இதுவரை தெளிவாகவில்லை.

உங்களில் சிலர் நினைக்கலாம், பறக்காத பூச்சிகளில் இருந்து பறக்கும் பூச்சிகள் பரிணாமம் அடைந்து வந்திருக்கலாம் என்று. ஆனால் அப்படியொரு முடிவுக்கு வருவதில் பிரச்சனை இருக்கின்றது. ஏனென்றால் நாம் மேலே பார்த்த (தற்போதைக்கு) உலகின் பழமையான பூச்சிகளான Rhyniognatha hirsti மற்றும் bristletails ஆகிய இரண்டும் ஒரே காலக்கட்டத்தை சேர்ந்தவை.

அதாவது, உலகின் பழமையான பறக்காத பூச்சியும் சரி, பறக்கும் பூச்சியும் சரி ஒரே காலக்கட்டத்தை சேர்ந்தவைகளாக இருக்கின்றன. அதனால் பறக்காத பூச்சியில் இருந்து பறக்கும் பூச்சிகள் வந்திருக்க வேண்டுமென்ற கருத்து குழப்பத்தையே தரும்.

பூச்சிகளுக்கு இறக்கைகள் தண்ணீரில் (இருக்கக்கூடிய பூச்சி போன்ற உயிரினங்களில் இருந்து) தோன்றியிருக்க வேண்டுமென்று பரிணாமவியலாளர்களில்  ஒரு சாராரும், நிலத்தில் தோன்றியிருக்க வேண்டுமென்று மற்றொரு சாராரும் யூகிக்கின்றனர்.  

எது எப்படியோ, ஒரு உயிரினத்திற்கு சிறுகச் சிறுக இறக்கை முளைத்து பறக்கும் பூச்சியாக மாறியதாக இதுவரை ஆதாரம் இல்லை.

According to the fossil record, it appears as though winged insects appeared out of nowhere with no records indicating a middle stage between wingless insects and winged ones --- Bianca Gonzalez, The South End, dated 14th Oct 2010.

உயிரினப்படிமங்களை பொறுத்தவரை, பறக்கும் பூச்சிகள் திடீரென தோன்றியிருப்பதாக தெரிகின்றது. பறக்காத பூச்சிகளுக்கும், பறக்கும் பூச்சிகளுக்கும் இடைப்பட்ட உயிரினங்கள் காணப்படவில்லை --- (Extract from the original quote of) Bianca Gonzalez, The South End, dated 14th Oct 2010.

பறவைகள் எப்படி வந்தன என்று கேட்டால், சிறிய அளவிலான டைனாசர்களில் இருந்து வந்திருக்க வேண்டுமென்று பரிணாமவியலாளர்களில் ஒரு பகுதியினர் கூறுவார்கள். ஆனால், பறக்கும் பூச்சிகளை பொறுத்தவரை, அவை எந்த உயிரினத்திலிருந்து வந்திருக்கும் என்று கேட்டால், எந்த உயிரினத்தை நோக்கியும் நம்பிக்கையாக கை காட்டும் நிலையில் பரிணாமவியலாளர்கள் இல்லை.

"As of 2009, there is no evidence that suggests that the insects were a particularly successful group of animals before they evolved to have wings" --- Wikipedia.

As of 2009, பூச்சிகள் வேறெந்த வெற்றிகரமான உயிரினமாகவும் இருந்து பின்னர் பரிணாமம் அடைந்து இறக்கைகள் கொண்ட ஒன்றாக மாறியதற்கு ஆதாரங்கள் இல்லை --- (Extract from the original quote of) Wikipedia.

ஆக, பூச்சிகளின் தோற்றத்திற்கு, அவைகளின் பறக்கும் தன்மை எப்படி வந்திருக்க வேண்டுமென்பதற்கு, எந்த உயிரினத்திற்கு இறக்கைகள் முளைத்து அவை பறக்கும் பூச்சிகளாக மாறியிருக்கும் என்பதற்கு என்று இவை அனைத்திற்கும் இதுவரை ஆதாரங்களில்லை.    


4. மடங்கும் இறக்கைகள் எப்படி வந்தன?

பூச்சிகளின் இறக்கைகளை பற்றி  பேசும் போது மற்றொரு குறிப்பிடத்தக்க விசயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

பூச்சிகளின் இறக்கைகளில் இரண்டு விதம் உண்டு. நீண்டுகொண்டிருக்கும் இறக்கை (தும்பிகளில் காணப்படுவது போல) மற்றும் வயிற்று பகுதியோடு மடக்கி வைக்கப்பட்டிருக்கும் இறக்கை (கரப்பான் பூச்சிகளில் காணப்படுவது போல).

இந்த மடக்கி வைக்கப்பட்டிருக்கும் இறக்கையானது சாதாரண விசயமல்ல. இது ஒரு மிக சிக்கலான அற்புத வடிவமைப்பு.

இந்த மடங்கக்கூடிய இறக்கைகள் எப்படி தோன்றின?.

இது குறித்தும் பரிணாமவியலாளர்களிடேயே தெளிவான பார்வை இருப்பதாக தெரியவில்லை. மடங்கக்கூடிய இறக்கைகள் முதன் முதலாக உயிரினப்படிமங்களில் தோன்றும் போதே முழுவதுமாக காட்சியளிக்கின்றன. நீண்டு கொண்டிருக்கும் இறக்கைகள் பரிணாமம் அடைந்து மடக்கக்கூடிய இறக்கைகளாக மாறியிருக்க வேண்டுமென்று சிலர் கூறலாம். ஆனால், அதுவும் ஒரு யூகமாக இருக்குமே தவிர அதற்கு ஆதாரங்கள் என்று ஒன்றுமில்லை.         

மொத்தத்தில்,

  • பூச்சிகளின் தோற்றத்திற்கு,
  • பறக்கும் பூச்சிகளின் தோற்றத்திற்கு,
  • எந்த உயிரினத்திலிருந்து பறக்கும் பூச்சிகள் தோன்றியிருக்க வேண்டுமென்பதற்கு,
  • அற்புதமான வடிவமைப்பான மடங்கக்கூடிய இறக்கைகள் எப்படி வந்திருக்க வேண்டுமென்பதற்கு,

என்று பூச்சிகள் தொடர்பான மிக முக்கிய கேள்விகளான இவை அனைத்திற்கும் ஆதாரங்களில்லை.  

நாம் இதுவரை பார்த்தது மட்டுமல்லாது, பூச்சிகளின் (சிக்கலான) கண்கள் (Compound Eyes), அவைகளின் வாழ்க்கை வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது (Metamorphosis, பட்டாம் பூச்சிகளுக்கு நடப்பது போன்று) என்று பூச்சிகளின் இந்த ஆச்சர்ய தன்மைகள் எப்படி தோன்றின என்பது போன்ற கேள்விகள் பரிணாமவியலாளர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளன. 

மொத்தத்தில், நாம் மேலே பார்த்த அனைத்து கேள்விகளுக்கும் பரிணாமவியலாளர்களின் மொழியில் பதில் சொல்ல வேண்டுமென்றால் "பூச்சிகளை பொறுத்தவரை பரிணாமம் மர்மமான முறையில் வேலை செய்திருக்கின்றது". 


5. சரி, நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஆதாரங்கள் இல்லாதது குறித்து பரிணாமவியலாளர்கள் என்ன விளக்கம் சொல்கின்றனர்?

பூச்சிகளின் தோற்றம் குறித்த தெளிவான பார்வை இல்லாததற்கு காரணம், ஆரம்ப கால உயிரினப்படிமங்கள் மிக மிக குறைவான அளவே இருக்கின்றன என்பது பரிணாமவியலாளர்களின் கருத்து.

ஆனால், நாம் மேலே பார்த்தது போல, நானூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பூச்சிகளின் உயிரினப்படிமங்கள் இருக்கின்றன. இந்த கால கட்டத்திற்கு சற்று முன்பு தான் பூச்சிகள்  முதன் முதலில் தோன்றியிருக்க வேண்டுமென்று பரிணாம காலகணக்கு (Evolutionary Timeline) கூறுகின்றது. ஆக, மிக குறுகிய காலத்தில் பூச்சிகள் உருவாகியிருக்க வேண்டும். இத்தனை குறுகிய காலகட்டத்தில் அது சாத்தியமா என்று பரிணாமவியலாளர்கள் சிந்திக்க வேண்டும்.

ஏனென்றால், நாம் மேலே பார்த்த உலகின் பழமையான பூச்சியான bristletails, 400 மில்லியன் ஆண்டுகளாக பெரிய அளவில் மாற்றமடையாமல் இன்று வரை வந்திருக்கின்றது. bristletails போன்றே பெரும்பாலான பூச்சிகளும் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக (பெருமளவில்) மாற்றமடையாமல் வந்திருக்கின்றன (சிலவற்றின் உருவங்களில் வித்தியாசம் உண்டு, உதாரணத்துக்கு தும்பி).  இத்தனை ஆண்டு காலமாக இவற்றிற்கு நடக்காத பரிணாமம், மிக குறுகிய காலத்தில் ஆரம்ப கால உயிரினங்களுக்கு மட்டும் நடந்து அவை பூச்சிகளாக மாறியிருக்குமா என்று பரிணாம ஆதரவு சகோதரர்கள் சிந்திக்க முன்வர வேண்டும்.       

இதையெல்லாம் விட, ஒரு சாதாரண வாழும் செல்லே தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை என்னும்போது, இன்றளவும் மனிதனால் போட்டி போட முடியாத அதி அற்புத தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ள பூச்சிகள் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பதில் சிறிதளவேணும் லாஜிக் இருக்கின்றதா?

பொறுத்திருந்தால் பூச்சிகள் பரிணாமம் மூலமாக தோன்றிய ஆதார படிமங்கள் கிடைக்கும் என்று பரிணாமவியலாளர்கள் கூறினால் ஏற்றுக்கொள்வோம். பொறுத்திருப்போம்.

அதெல்லாம் சரி, ஆராம்ப கால படிமங்கள் தான் கிடைக்கவில்லை, அதற்கு பிறகு தான் லட்சக்கணக்கான உயிரினப்படிமங்கள் கிடைத்திருக்கின்றனவே? அவை எவற்றிலாவது ஒரு பூச்சி மற்றொரு பூச்சியாக (அல்லது வேறொரு உயிரினமாக) மாறியதாக ஆதாரம் இருக்கின்றதா? ...இல்லையே.  அந்தந்த பூச்சிகள் அந்தந்த பூச்சிகளாகத்தானே இருக்கின்றன!!!!    

பூச்சிகள் குறுகிய காலமே வாழக்கூடியவை, வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. அப்படியென்றால் இத்தனை மில்லியன் ஆண்டுகளாக லட்சக்கணக்கான இடைப்பட்ட பூச்சிகள் (Transitional Fossils) நமக்கு உயிரினப்படிமங்கள் மூலம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லையே.

மொத்தத்தில், உயிரினப்படிமங்களில் முதன் முதலாக காணப்படும் விலங்குகளும் சரி, பூச்சிகளும் சரி, முதன் முதலாக காணப்படும்போதே முழுமையாக, சிக்கலான வடிவமைப்பை கொண்ட முன்னேறிய நிலையிலேயே காணப்படுகின்றன. அவை பரிணாமம் என்ற ஒன்றை கடந்து வந்ததாக அறிகுறி இல்லை. 

இது பற்றியெல்லாம் கேட்டால் ஒரு சிலர் இப்படியும் கூறுவார்கள், "பரிணாமம் நிச்சயம் நடந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு ஆதாரங்கள் தான் இதுவரை இல்லை" என்று...

அதுதான் ஆதாரங்களில்லையே...அப்புறம் எப்படி பரிணாமம் நடந்திருக்க வேண்டும்?

டார்வினின் ஆருடம் என்றாவது ஒருநாள் நிச்சயம் பலிக்கும் என்ற அபார நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் பரிணாம ஆதரவாளர்களான சிலர் ...

நாமும் காத்திருப்போம்....கூடிய விரைவில் அந்த சிலரது மூடநம்பிக்கை விலகுமென்று... 
 
பரிணாமவியலாளர்களின் கற்பனைகள் மட்டுமே விதவிதமாக பரிணாமம் அடைந்து கொண்டிருக்கின்றன....

பரிணாம கதை - ஹாரி பாட்டர் கதைகளை விட நிச்சயம் மேம்பட்டது...

மூட நம்பிக்கையாளர்களிடமிருந்து உலக மக்களை இறைவன் காத்தருள்வானாக...ஆமின்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.


Pictures taken from:
1. Natural History Museum London's Website.
2. National Geographic Website.

References:
1. New light shed on the oldest insect, Michael S. Engel & David A. Grimaldi, Nature Journal, 427, 627-630 (12 February 2004), doi:10.1038/nature02291. link
2. Paul D. Taylor & David N. Lewis, Fossil Invertebrates, Harvard University Press, 2007, p.160.
3. The biomechanics of insect flight: form, function, evolution - Robert Dudley, Princeton University Press, 2000, p.159.
4. Claim CC220.1 - Talkorigins.org. link 
5. Oldest insect delights experts - Paul Rincon, BBC, dated 11th feb 2004. link
6. Oldest Insect Imprint Found - Christine Dell'Amore, National Geographic, dated 17th Oct 2008. link
7. The oldest fossil insect in the world - Natural History Museum, London. link
8. Insect - Wikipedia. link
9. Evolution of Insects - Wikipedia. link
10. Insect Flight - Wikipedia. link
11. What insect has the fastest wing beat? - Answers.com. link
12. How many times a minute does a bee flap its wings? - Faqkids.com. link
13. Insects Insecta Invertebrates Arthropods - entomon.net. link
14. Researchers Discover Oldest Fossil Impression of a Flying Insect - newswise.com. link
15. Archaeognatha - Encyclopedia Britannica. link
16. How did Insects get their wings - Jackie Grom, Origins, Science Magazine Blogs, dated Mar 19, 2009. link
17. The 'bug doctor' finds insect missing link - Bianca Gonzalez, The South End, dated 14th Oct 2010. link
18. Insect evolution: a major problem for Darwinism - Jerry Bergman. creation.com.  link
19. The Evolution of Insect Flight - Matthew Vanhorn. apologeticspress.org. link
20. Crustacean, Rhyniognatha, Archaeognatha, Dragonfly, Timeline of evolution, List of transitional fossis, Metamorphosis - Wikipedia.
21. Interesting and Fun Facts About Flies! - Sophie Adams. associatedcontent.com. link
22. Tale of the Headless Dragonfly: Ancient Struggle, Preserved in Amber - Science daily, dated 27th Oct, 2010. link 
23. Long live cockroaches, man's uninvited fellow travellers  - Ed Baker, Natural History Museum London. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.






39 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அருமையான பதிவு, இஸ்லாமியர்களை நோக்கி மூடனம்பிக்கையாளர்கள் என்று கூக்குரலிடம் இவர்களிடம் தங்களின் மடத்தனமான கொள்கையை நிரூபிக்க என்ன ஆதாரமிருக்கின்ற்றது.இவரகளிடம் தான் மூட நம்பிக்கை மலிந்து கிடக்கிறது.கற்பனை உலகில் வாழும் இவர்களுக்கு நிஜ வழ்க்கை வெறும் கேலி கூத்தாகதான் தோன்ற்றும்.
    இறைவன் இவ்ர்களுக்கு நேர் வழி காட்டுவானாக.

    ReplyDelete
  2. கஷ்டம்டா சாமி

    ReplyDelete
  3. சகோதரர் பாஸித்,

    வ அலைக்கும் சலாம்,

    //இவர்களிடம் தங்களின் மடத்தனமான கொள்கையை நிரூபிக்க என்ன ஆதாரமிருக்கின்ற்றது//

    ஒரு ஆதாரமும் கிடையாது..

    பரிணாமம் தோல்வி அடைந்ததற்கு காரணம், அதனை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, அது வெறும் யூகத்தில் அமைந்த ஒன்று என்பதால்தான்.

    //இவரகளிடம் தான் மூட நம்பிக்கை மலிந்து கிடக்கிறது//

    சரியாக சொன்னீர்கள். பரிணாம நம்பிக்கையாளர்கள் மூட நம்பிக்கையாளர்கள்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  4. சகோதரர் அனானி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    -----
    Anonymous said...
    கஷ்டம்டா சாமி
    -----

    எதற்காக கஷ்டம்? உண்மையை ஏற்றுக்கொள்வதிலா?

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல இறைவன் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தந்தருள்வானாக..ஆமின்

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  5. //5. சரி, நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஆதாரங்கள் இல்லாதது குறித்து பரிணாமவியலாளர்கள் என்ன விளக்கம் சொல்கின்றனர்?//

    நிறைய விளக்கங்கள் இருக்கின்றன, தானாக கை முளைத்திருக்கலாம், கால் முளைத்திருக்கலாம், கண், மூக்கு, வாய் எல்லாம் வந்திருக்கலாம், லாம் லாம், ஆனால் தானாக மட்டுமே வந்திருக்கும்.

    வேறு ஒரு சக்தி உருவாக்கியது என்று சொல்பவர்கள் எல்லாம் முட்டாள்கள், தானாக வந்தது என்று சொன்னால் அறிவாளி.

    ReplyDelete
  6. //பரிணாமவியலாளர்களின் கற்பனைகள் மட்டுமே விதவிதமாக பரிணாமம் அடைந்து கொண்டிருக்கின்றன....//

    பரிணாமம் என்றதும் உயிர்கள் பரிணாமம் என்று நினைத்து கொண்டீர்களா?, கற்பனை திறன் அதிகரிப்பதை தான் "பரிணாமம்" என்று கூறுகின்றனர்.

    ReplyDelete
  7. தங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, இறைவன் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்க்கும் அமைதியை நல்குவானாக, உங்களது பணிக்கும் நற்கூலி வழங்குவானாக......வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. சகோதரர் ஷபிக்,

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே...

    இங்கு பதியப்படும் பதிவுகளை நன்கு ஆய்வு செய்யுங்கள். எழுத்தப்பட்டவை சரி என்னும் பட்சத்தில் மற்ற சகோதரர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். இறைவன் நம் முயற்சிகளை இலேசாக்கி வைப்பானாக...ஆமின்.

    தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  9. சகோதரர் ஆஷிக் அஹமத்,

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    எல்லாப் புகழும் பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக.

    பரிணாமத்துக்கு எதிரான அறிவுப்பூர்வமான வாதங்களுடன் கூடிய தொடர்ச்சியான உங்கள் பதிவுகள் கண்டு மிக்க மகிழ்ச்சி. அதிலும் இந்த ஹாரி பாட்டர் சீரீஸ்... கேட்கவே வேண்டாம்... ஜெம்.

    எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் கண்டுபிடிப்பதற்கு 74 ஆண்டுகளுக்கு முன் பரிணாமக்கதை எழுதியவர்தானே டார்வின்? இல்லையேல் 'இவ்வுலகின் முதல் அமீபாவின் அப்பா யார்' என்று சொல்லி இருந்திருப்பார்..!

    ஊரில் ஹாரி பாட்டர்-7 சினிமா போஸ்டர் கண்ணில் பட ஏனோ உங்கள் பரிணாம எதிர்ப்பு பதிவுகள் நியாபகம் வந்தன. போகிற போக்கில் பதிவுலகில் "பரிணாமம் என்றாலே ஹாரி பாட்டர் கதைகள்" என்று அழுத்தந்திருத்தமாய் பதிந்துகொண்டே இருக்கிறது... மாஷாஅல்லாஹ், இது தங்கள் விடாமுயற்சிக்கு மகத்தான வெற்றிதான்.

    ஆனாலும், 'யாராவது மூட் அவுட்' ஆனால், நான் பரிந்துரைக்கும் ஒரு பதிவு... தங்களின் "தற்செயலாய் வீடு உருவாகுமா?" தான்..! எவ்வளவு பெரிய உம்மனாம் மூஞ்சியையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதிவு அது.

    ReplyDelete
  10. சகோதரர் கார்பன் கூட்டாளி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    -----
    வேறு ஒரு சக்தி உருவாக்கியது என்று சொல்பவர்கள் எல்லாம் முட்டாள்கள், தானாக வந்தது என்று சொன்னால் அறிவாளி.
    ------

    பூச்சிகளை பற்றி மற்றொரு ஆச்சர்ய செய்தியை படித்தேன். அதாவது, நாம் பறக்கும் பூச்சியை போல கையை மடக்கி விரிக்கும் போது, எத்தனை முறை மடக்குகிறோமோ அத்தனை முறை நம் மூளையில் இருந்து சைகைகள் வருகின்றன.

    ஆனால் பூச்சிகளுக்கோ, அவை முதல் முறை இறக்கையை அடிக்க துவக்கும் போது மட்டுமே மூளையில் இருந்து சைகை வருகின்றது. பின்னர் இறக்கைகள் தானியங்கியாக அடித்து கொண்டே இருக்கின்றன. பின்னர் மூளையில் இருந்து off செய்வதற்கு சைகை வருகின்றது.

    அல்ஹம்துலில்லாஹ்...என்னவொரு அற்புத கட்டமைப்பு...

    இதுவெல்லாம் தற்செயலாக உருவாகியது என்று சொல்லுபவர்கள் தான் அறியாமையில் இருக்கின்றார்கள். அப்படி சொல்லுபவர்கள் அப்படி உருவானதற்கு ஆதாரமாக எதையாவது காட்ட வேண்டும். ஆனால் இதுவரை அப்படி எதுவும் இல்லை.

    அவர்களை பார்த்து ஒரு சிறிய புன்னகையை காட்டி விட்டு நம் முயற்சியை தொடருவோம், இறைவன் அந்த சிலருக்கு நேர்வழி காட்டுவான் என்ற நம்பிக்கையில்...

    தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி...

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  11. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

    வ அலைக்கும் சலாம்,

    தங்களுடைய பாராட்டுகளுக்கு நன்றி...எல்லாப்புகழும் இறைவனிற்கே...

    ----------
    எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் கண்டுபிடிப்பதற்கு 74 ஆண்டுகளுக்கு முன் பரிணாமக்கதை எழுதியவர்தானே டார்வின்? இல்லையேல் 'இவ்வுலகின் முதல் அமீபாவின் அப்பா யார்' என்று சொல்லி இருந்திருப்பார்..!
    ----------

    டார்வினுக்கு தெரிந்தது ஒரு செல்லின் வெளிப்புறம் மட்டுமே. ஒரு வேலை இன்றைக்கு நாம் அறிந்திருக்கும் முன்னேற்றங்கள் அவருக்கு வைத்திருந்தால் அவர் தன்னுடைய கருத்தை மறுபரிசீலனை செய்திருக்கலாம்.

    டாக்டர் Michael Behe அவர்களின் Darwin's Black Box புத்தகத்தை படித்து பாருங்கள். டார்வின் சாதரணமாக நினைத்தவை இன்று மிக மிக சிக்கலான வடிவமைப்பு என்று நிரூபிக்கப்பட்டவை. அதை பற்றியே Behe குறிப்பிடுகின்றார். அதிக பரபரப்பை உண்டாக்கிய புத்தகம் அது. நேரமிருந்தால் அவருடைய ப்ளாக்கை படித்து பாருங்கள், கீழே சுட்டுங்கள்

    Dr. Michael Behe's Blog

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ,

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்.....
    ஆங்கிலத்தில் இருந்து தமிழில் அழகாக மொழி பெயர்த்திருக்கிறீர்கள் அருமையான ஆக்கம்
    என்னைப் போன்றவர்களுக்காகவே நிறைய மெனக்கெட்டு இருக்கிறீர்கள்
    ஜஸாக்கல்லாஹ் கைரன்

    ReplyDelete
  14. சகோதரர் ஷாநவாஸ்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    --------------
    இப்பதிவுகளை டார்வின் மதத்தை சேர்ந்தவர்கள் பார்வையிடுகிறார்களா
    -------------

    பார்வையிடுவார்கள் என்றே நினைக்கின்றேன். பரிணாம பதிவுகள் மிக அதிக அளவில் ஹிட்ஸ் வாங்குகின்றன. பல்லேறு ஊர்களில் இருந்தும் பார்வையிடுகின்றார்கள். அதனால் பரிணாம ஆதரவாளர்கள் வருகை தந்திருப்பார்கள் என்றே எண்ணுகின்றேன். அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

    ---------
    பேரா. திரு.தருமி அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல காத்திருக்கிறார்
    -----------

    தருமி ஐயாவை விட்டு விடுங்கள். அவருக்கு பரிணாமம் குறித்த சரியான புரிதல் இல்லை என்பதற்கு என்னுடைய தளத்தில் மற்றும் அவரது தளத்தில் உள்ள அவரது பரிணாமம் குறித்த கருத்துக்களே ஆதாரம்.

    முதலில் அவர் பரிணாமத்தின் ஆரம்ப கால நிகழ்வுகளில் இருந்து வெளியே வரட்டும்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  15. சகோதரர் ஹைதர் அலி,

    வ அலைக்கும் சலாம்,

    -----
    ஆங்கிலத்தில் இருந்து தமிழில் அழகாக மொழி பெயர்த்திருக்கிறீர்கள் அருமையான ஆக்கம்
    என்னைப் போன்றவர்களுக்காகவே நிறைய மெனக்கெட்டு இருக்கிறீர்கள்
    -------

    எல்லாம் மறுமையின் மகிழ்ச்சிக்காகத்தான்.

    தங்களுடைய பாராட்டுகளுக்கு மற்றும் ஊக்கத்திற்கு நன்றி. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  16. //தருமி ஐயாவை விட்டு விடுங்கள். அவருக்கு பரிணாமம் குறித்த சரியான புரிதல் இல்லை என்பதற்கு என்னுடைய தளத்தில் மற்றும் அவரது தளத்தில் உள்ள அவரது பரிணாமம் குறித்த கருத்துக்களே ஆதாரம்.

    முதலில் அவர் பரிணாமத்தின் ஆரம்ப கால நிகழ்வுகளில் இருந்து வெளியே வரட்டும்.//

    உண்மைதான் இன்னும் அவரும் அவரை சார்ந்தவரும் பரிணாமத்தின் ஆரம்பகால கதைகளையே கூறி வருகின்றனர், அதற்கு உதாரணம் vestigial organs பற்றி இன்னும் பழைய கதைகளை அறிவியல் என்று கூறி வருவது.

    சமாளிக்கும் பழக்கத்தை விட்டாலே அவர்கள் பரிணாமத்தை விடுவதற்கு உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  17. மேலும் நமக்கு திரு தருமியையும் அவரது ஆதரவாளர்களையும் பார்ப்பது தேவை இல்லாதது, நடுநிலை வாதிகள் அவர்களின் கதை களை நம்பி ஏமாறக்கூடாது என்பது தான் நமது எண்ணம். நடுநிலைவாதிகளின் நியாயமான கேள்விகளுக்கு நிச்சயமாக சரியான பதில் தரப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  18. அஸ்ஸலாமு அலைக்கும்,
    இறைவனுக்கே அனைத்து புகழும்,
    மனது மகிழ்கிறது, உள்ளம் பூரிப்பைடைகிறது,இறைமாரக்கமாம் இஸ்லாத்தினை எடுத்துரைக்க இவ்வளவு உள்ளங்களா? அறியாமை என்னும் காட்டிருலிள் உலன்ற்று தவிக்கும் பகுத்தறியா வாதிகளிக்கு இறைவன் நேர் வழி காட்டுவனாக ஆமீன்.

    ReplyDelete
  19. சகோதரர் இறைநேசன்,

    வ அலைக்கும் சலாம்,

    -----
    இஸ்லாத்தினை எடுத்துரைக்க இவ்வளவு உள்ளங்களா?
    ------

    அல்ஹம்துலில்லாஹ்...நானும் இதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இறைவன் நமக்களித்த மாபெரும் கிருபை இது. நம் சகோதர/சகோதரிகள் தொடர்ந்து சிறப்பாக செயலாற்ற இறைவனிடம் பிரார்த்தித்து கொண்டு இருப்போம்.

    வஸ்ஸலாம்,

    தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  20. M. JOHNSON
    KANNIYAKUMARI

    ////இவரகளிடம் தான் மூட நம்பிக்கை மலிந்து கிடக்கிறது//

    சரியாக சொன்னீர்கள். பரிணாம நம்பிக்கையாளர்கள் மூட நம்பிக்கையாளர்கள்.//
    யாரை சொல்கிறீர்கள் சகோதரா மூட நம்பிக்கையாளர்கள் என்று?. பரிணாம நம்பிக்கையாளர்கள் அதனை நம்புவது டார்வின் அது குறித்து எழுதிய புத்தகத்தை வைத்து தான். அது போன்றே குரான் என்ற புத்தகத்தை வைத்து தான் முகமது என்பவர் கடவுளின் தூதர் என்று கூறுகிறீர்கள். அதை நிருபிக்க குர்ஆனில் கூறி உள்ளவை தவிர்த்து வேறு எதாவது ஆதாரங்கள் வைத்திருக்கிறீர்களா?

    //இப்பதிவுகளை டார்வின் மதத்தை சேர்ந்தவர்கள் பார்வையிடுகிறார்களா.ஏற்று கொள்கிறார்களா இல்லை மறுக்கிறார்களா.மற்ற அல்லக்கைகளை விடுங்கள்//
    அற்புதமான பெயர்களை பிற மதத்தவருக்கு கொடுக்கிறீர்களே அது எப்படி இஸ்லாமியர்களால் மட்டும் முடிகிறது. முகமது பிற மதத்தவரை காபிர்கள் என்றார். நீங்கள் அல்லக்கைகள் என்கிறீர்கள். இதில் பிற மதத்தவரை மதிக்க வேண்டும் என்று அல்லா சொன்னார் என்று தம்பட்டம் வேறு.

    இங்கு பரிணாமத்தை மறுப்பதற்காக நீங்கள் எழுதிய விளக்கங்களை எல்லாம் கூறி இருக்கும் அறிஞர்கள் அதே டார்வின் மதத்தை சேர்ந்த அல்லக்கைகள் தானே. உங்கள் அல்லா மார்க்கத்தை சேர்ந்த யாரும் இதற்கு விளக்கங்கள் ஏதும் கூறவில்லையா?
    டார்வின் பின்பற்றிய மதம் அவர்க்கு சிந்திக்கவும் கற்று கொடுத்தது, அதனால் தான் அவர் இப்படித்தான் இது இருக்க வேண்டும் என்று சொல்லாமல் இப்படியும் இருக்கலாமே என்று சிந்தித்தார். அது போன்று தான் இங்கே நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் அறிஞர்களும். சிந்திக்க சிந்திக்க தான் புது எண்ணங்களும் புது புது கருத்துக்களும் வெளிப்படும்.
    ஆப்பிள் மரத்தின் அடியில் படுத்திருந்த நியூட்டன் கீழே விழுந்த ஆப்பிள் ஏன் விழுந்தது என்று சிந்தித்ததால் தான் புவி ஈர்ப்பு விசை என்ற ஒன்றை கண்டு பிடித்தார். டார்வின் பின்பற்றிய மதத்தையே அவரும் பின்பற்றியதுதான் அதற்கு காரணம் என்று தான் நான் நினைக்கிறன். அவரும் மார்க்கத்தை பின்பற்றியிருந்தால் 'வேலைக்கு போகாமல் தூங்கி கொண்டிருந்த எனக்கு கடவுள் படியளந்து விட்டார், எல்லா புகழும் இறைவனுக்கே ' என்று பழத்தை தின்று விட்டு மறுபடியும் குறட்டை விட்டிருப்பார்.
    உங்களை நினைத்தால் பாவமாக தான் இருக்கிறது உங்களாலும் சிந்திக்க முடியவில்லை சிந்திப்பர்களையும் உங்களுக்கு பிடிப்பதில்லை. அவர்களை கிண்டல் செய்வது மட்டும் ஜோராக முடிகிறது. உங்களால் வேறு என்ன செய்ய முடியும். என்ன செய்வது குண்டு சட்டியில் குதிரை ஓட்டினால் இப்படித்தான்.
    உங்கள் பதிவில் ஏன் யாரும் பதில் விளக்கம் தருவதில்லை என்று யோசித்தேன் ஒரு கதை நினைவுக்கு வந்தது.

    அக்பர், பீர்பால் குட்டி கதை ஒன்று..
    அரச சபையில் அமர்ந்திருந்த மன்னர் அக்பருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அது என்னவென்றால் ”முட்டாள் ஒருவன் நம்முடன் விவாதம் செய்ய வந்தால் அவனுக்கு எப்படி பதில் சொல்லவேண்டும்” என்பது. சபையில் இந்த கேள்வியை கேட்டதும், அமைச்சர்கள் ஒவ்வொரு விதமாக பதில் சொன்னார்கள். ஒருவர் சொன்னார் ‘அவனை அடித்து விரட்ட வேண்டும்’ மற்றொருவர் ‘அவனை திட்ட வேண்டும்’ இன்னொருவர் ‘அவனிடம் பதிலுக்கு பதில் பேசவேண்டும்’ இப்படி பல விதமான பதில்கள். ஆனால் மன்னருக்கு எந்த பதிலும் திருப்தி இல்லை. கடைசியாக விவேகியான பீர்பாலிடம் பதில் கூறுமாறு கேட்டார். ஆனால் மன்னரை ஒருமுறை ஏறெடுத்து பார்த்த பீர்பால் பதில் ஏதும் கூறாமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டார். திடுக்கிட்ட அக்பர் மறுபடியும் பீர்பாலிடம் பதில் கூறுமாறு கேட்டார் பீர்பால் எந்த பதிலும் கூறவில்லை. பலமுறை கேட்டும் பீர்பால் பதில் கூறாததால் அக்பர் கோபம் அடைந்தார். ”பீர்பால் உங்களுக்கு அவ்வளவு ஆணவமா’ என்று கேட்க. அக்பரின் கோபத்தை உணர்ந்த பீர்பால் மெதுவான குரலில் ”அரசே நான் தங்கள் கேள்விக்கு பதில் கூறிக்கொண்டு இருக்கிறேன்’ என்றார். அக்பர் கோபம் குறையாமல் ”என்ன உளறுகிறீர்கள்” என்றார். அதற்கு பீர்பால் “மன்னா முட்டாள் ஒருவன் நம்மிடம் பேசினால் நாம் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். ஏன் என்றால் அவனிடம் பேசும்போது நாமும் முட்டாள் ஆகி விடுகிறோம். தான் சொல்வது மட்டுமே சரி மற்றவை எல்லாமே தவறு என்று கூறுபவன் முட்டாள் மட்டுமே.
    பலரும் இதை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் திரு தருமி போன்றோர் உங்களுக்கு பதில் சொல்ல வரவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  21. நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    சகோதரர் ஜான்சன்., அவர்களுக்கு இந்த பதிவிற்கு உங்கள் மறுப்பாக என்ன சொல்ல வருகிறீர்கள், எந்த ஒரு முழுமைப்பெற்ற தொகுப்பும்., காலப்போக்கில் அதன் நம்பக தன்மையே மாற்றிக்கொண்டே போக கூடாது அஃது அவ்வாறு மாற்றமடைந்தால் அது ஆதாரபூர்வமானதல்ல., வெற்று யூகங்களே., அதைத்தான் சகோதரர் ஆஷிக் எடுத்து இயம்பியிருக்கிறார்., அதனால் தான் மதரீதியான ஆவணங்களை முன்வைக்காமல் அறிவியலாளர் கூற்றை முன்னிருத்துகிறார்., நீங்கள் சொல்வது போல் டார்வீனிசத்தை முன்பு அங்கிகரித்தவர்கள் இப்போது அதை ஏற்ற மறுப்பது ஏன்?
    //டார்வின் பின்பற்றிய மதம் அவர்க்கு சிந்திக்கவும் கற்று கொடுத்தது, ..
    சரிதான்., அதனால் தான் இதைப்போன்ற பரிணாமவிய(கதைகளி)லிருந்து உண்மையே நோக்கி வர தொடங்கியிருக்கிறார்கள்.,
    இங்கேயும் பாருங்கள் அவர் இக்கட்டுரையே நியாயப்படுத்த இஸ்லாத்தை முன்னிருத்தவில்லை., ஆனால் பாருங்கள் நீங்கள் மறுக்க இஸ்லாத்தை முன்னிருத்திருகிறீர்கள்.,
    //உங்களாலும் சிந்திக்க முடியவில்லை சிந்திப்பர்களையும் உங்களுக்கு பிடிப்பதில்லை. அவர்களை கிண்டல் செய்வது மட்டும் ஜோராக முடிகிறது.//
    இங்கு யாரு யாரை கிண்டலடிப்பது சகோதரர் தன் உங்கள் பின்னூட்டத்தை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்.

    //அதனால் தான் திரு தருமி போன்றோர் உங்களுக்கு பதில் சொல்ல வரவில்லை என்றே நான் நினைக்கிறேன்.//
    தருமி ஐயா., ஏன் எதற்கு இங்கு பதில் சொல்ல வரவில்லை என்பதை இவ்விணைய ஏனைய பின்னூட்டங்களை பாருங்கள்
    குண்டு சட்டியில் குதிரை ஓட்டினால்...
    இதற்காக தான் இங்கு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு.

    ReplyDelete
  22. நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

    @ சகோதரர் M. JOHNSON
    KANNIYAKUMARI அவர்களுக்கு

    சகோதரர் ஆஷிக் அஹ்மத், இப்பதிவில் வழக்கம்போலவே எந்த மதரீதியான ஆவணங்களையும் முன்வைக்காமல் அறிவியலாளர்களின் கூற்றை மட்டுமே முன்வைக்கிகிறார். முழுப்பதிவும் அப்படித்தானே உள்ளது?

    ஒரு வேதவசனமோ, இறைத்தூதர் போதனைகளோ மேற்படி பரிணாம விஷயத்தில் ஆதாரமாக காட்டப்படவே இல்லையே சகோ...!

    மேலும், பதிவின் கீழே ஆஷிக் கொடுத்துள்ள 23 reference-களில் ஏதேனும் ஒரு குர்ஆன் அல்லது ஒரு ஹதீஸ் அல்லது இவற்றை பிரச்சாரம் செய்யும் ஒரு ஊடகம் என்று எவற்றையாவது காட்டிவிட்டு... "நீங்கள் இஸ்லாமிய சிந்தனையில் பரிணாமத்தை மறுக்கிறீர்கள்" என்று சொன்னால் உங்களின் இத்தனை நீ................ண்ட பின்னூட்டத்திற்கு கொஞ்சமாவது உயிர் இருந்திருக்கும்.

    தருமி போன்றவர்கள் மறுக்க வில்லை என்றால்... ஒன்று, ஆதாரபூர்வமாய் மறுக்க ஏதும் அவர்களிடம் விசயம் இருக்காது அல்லது 'முட்டாள்த்தனமாய் ஏதாவது உளறிக்கொட்டி கடைசியில் அவமானப்பட வேண்டாம்' என்று அமைதி காக்கலாம். ஆனால் நீங்கள் அப்படிப்பட்டவர் இல்லை போல..!

    அதெப்படி சகோ...!
    நீங்களே உங்களுக்கு பக்காவா பொருந்துகிற மாதிரி கதை சொல்லிக்கொள்கிறீர்கள்? சரி.. சரி.. என் வேலை மிச்சம்.

    ReplyDelete
  23. //அதற்கு பீர்பால் “மன்னா முட்டாள் ஒருவன் நம்மிடம் பேசினால் நாம் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். //

    ....

    //பலரும் இதை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் திரு தருமி போன்றோர் உங்களுக்கு பதில் சொல்ல வரவில்லை என்றே நான் நினைக்கிறேன்.//

    ....

    ReplyDelete
  24. Terrorist Aashiq,
    You need not bother about Evolution. It is beyond your level of intelligence...

    Just prove that :

    1. Your Allah exists
    2. He gives 72 virgins to terrorists who kill other people.
    3. By wearing burkha, women can play tennis .

    First do this !!! haha!!!

    ReplyDelete
  25. Dear Anonymous...

    so you boldly accept the truth that, there is no proof for Evolution.

    that is it. that is it.

    that is what these h.p.series of articles say.

    so you need not bother about the counter proofs in favor of evolution. It is beyond your level of intelligence...

    OK..

    Just prove that :

    any one evolution in the last 2000 years (as the history registered) which took place among any one of the trillions of species known.

    I'll not ask you foolishly (as like you) to bring the apes which gave birth to first man/woman...

    after all... I'm speaking about the article and related to that.

    --"Anonymous of Anonymous-es".

    ReplyDelete
  26. அட ராமா. இந்த கொசுத்தொல்ல தாங்கமுள்ள.

    ReplyDelete
  27. Dei Terrorist Aashiq/anonymous,

    Nobody kills others bcos they dont beleive in evolution. This entire wikipedia research is a waste of time, as Evolutionists are not going to look at it.

    But everyday terrorists are bombing Indian cities becos of these beleifs:


    1. Your Allah exists
    2. He gives 72 virgins to terrorists who kill other people.
    3. By wearing burkha, women can play tennis .

    Which one should we discuss? Which is the need of the hour??

    ReplyDelete
  28. Brother Anony,

    Assalaamu Alaikum (varah)...

    Sooo, yet a another Darwinist from the religion of Evolution who doesn't have any arguments against the post...

    Evolution Religion drives Science and it matters...

    Anyhow, better luck next time brother..

    Wassalaam,

    Your brother,
    Aashiq Ahamed

    ReplyDelete
  29. சகோதரர் ஜான்சன்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்களுடைய பின்னூட்டத்தில் ஒரு தனி நபரை "ஒரு வார்த்தையால்" சாடி இருக்கின்றீர்கள். அதனை என்னால் அனுமதிக்க முடியாது. மன்னிக்கவும். அதனால் தாங்கள் அந்த வார்த்தையை தவிர்த்து விட்டு மறுபடியும் பின்னூட்டமிட்டால் பிரசுரிக்க ஏதுவாய் இருக்கும்.

    புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

    நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  30. M. JOHNSON
    KANNIYAKUMARI

    திரு gulam மற்றும் முகமது ஆஷிக்,
    பரிணாமம் நடந்ததா இல்லையா என்பது எனக்கு தேவை இல்லாதது. இந்த பதிவில் பதில் கூறிய ஒருவர் டார்வின் மதத்தை சேர்ந்த அல்லக்கைகள் என்று கூறியதற்கு தான் பதில் கூறி இருக்கிறேன். நன்றாக அதை படித்து விட்டு எனது பின்னூட்டத்திற்கு உயிர் இருக்கிறதா என்று கண்டறியுங்கள்

    ////shanawazkhan said...
    மாஷா அல்லாஹ்! தங்களுடைய பணிக்கு அல்லாஹ் நற்கூலி தருவானாக!எனக்கு ஒரு சந்தேகம்!.(((((( இப்பதிவுகளை டார்வின் மதத்தை சேர்ந்தவர்கள் பார்வையிடுகிறார்களா.ஏற்று கொள்கிறார்களா இல்லை மறுக்கிறார்களா.மற்ற அல்லக்கைகளை விடுங்கள்))))))))). நம்முடைய டார்வினிய மதகுரு. "விந்துதுவம் " போதித்த விஞ்ஞானி கேள்வி திலகம் பேரா. திரு.தருமி அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல காத்திருக்கிறார் . ஆவலுடன். மண்டைக்கு மத பூட்டு போட்டு கொண்டவர்களில் ஒருவனான நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.//

    டார்வின் மதத்தை சேர்ந்தவர்கள் ஏதோ ஒன்றுக்கும் வக்கற்றவர்கள் போல் கூறிய ஒருவருக்குத்தான் பதில் கூறி இருக்கிறேன். அவர் அதை கூறாமல் இருந்தால் நானும் பதில் கூறி இருக்க போவதில்லை. அந்த டார்வின் மதத்தை பின்பற்றுபவர்களின் விளக்கங்களை தான் இந்த பதிவில் மேற்கோள் காட்டப்பட்டு இருக்கிறது என்றுதான் கூறி இருக்கிறேன். புத்திசாலிகள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைத்தேன்.

    //நீங்களே உங்களுக்கு பக்காவா பொருந்துகிற மாதிரி கதை சொல்லிக்கொள்கிறீர்கள்? //
    சிறு கதைகளிலும் பல மூளைக்கு உரைக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன சகோதரா. உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் கேளுங்கள். இந்த கதையை அவர்களும் சொல்வார்கள். இல்லை என்றால் புத்தக கடைகளில் பீர்பால் கதைகள் புத்தகமாக கிடைக்கும் அதை வாங்கி படியுங்கள். வெறும் குரானையும் ஹதீசையும் மட்டும் படித்தால் இது போன்ற விஷயங்கள் தெரியாமல் தான் போகும். இது தான் நான் சொன்ன குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது.

    ReplyDelete
  31. நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    சகோதரர்., ஜான்சன்
    உங்கள் பதிலிலேயே தெளிவான முரண்பாடு.,
    //திரு gulam மற்றும் முகமது ஆஷிக்,
    பரிணாமம் நடந்ததா இல்லையா என்பது எனக்கு தேவை இல்லாதது//
    இங்கு பதிவை முன்னிருத்தி தான் பின்னூட்டங்கள் ஆனால் பாருங்கள் பதிவே அவசியமற்றது என்று சொல்லுகிறீர்கள்., அப்படியானால்., எதை குறித்து உங்களுடன் பேசுவது... எம் சகோதரர்கள் பேசியது தவறாக உங்கள் பார்வையில் பட்டால் அதே தவறை தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.. மீண்டும் உங்கள் பின்னூட்டத்தை படித்து பாருங்கள்., பொறுமை கொள்ளுங்கள் கடவுள் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்டட்டும்

    ReplyDelete
  32. சகோதரர் அனானி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    உங்களுடைய பின்னூட்டத்தில் உள்ள சில வார்த்தைகள் கண்ணியம் குறைவானவைகளாக இருப்பதால் உங்களது பின்னூட்டத்தை என்னால் வெளியிட முடியாது...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  33. M. JOHNSON
    KANYAKUMARI

    திரு gulam
    //உங்கள் பதிலிலேயே தெளிவான முரண்பாடு//
    நீங்கள் முதல் வரியை மட்டும் படித்தால் முரண்பாடாகத்தான் தெரியும். தயவு செய்து முழுவதும் படிக்கவும் . நீங்கள் அறிவியலை பற்றி விவாதம் செய்தால் அதில் ஏன் பிற மதத்தவரை இழுக்க வேண்டும் என்பதுதான் எனது கேள்வி. டார்வின் மதத்தை சேர்ந்த யாரும் உங்கள் பதிவில் வந்து குரானையோ உங்கள் மார்க்கத்தை பற்றியோ ஏதும் கூறவில்லையே. உங்கள் சகோதரர்கள் பிற மதத்தவரை அல்லக்கைகள் என்பது உங்களுக்கு தவறாக படவில்லையா தயவு செய்து பதில் கூறவும்.

    ReplyDelete
  34. சகோதரர் ஜான்சன்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    ஷாநவாஸ் அவர்கள் அனைவரையும் குறிப்பிட்டு அப்படி கூறியதாக தெரியவில்லை. இருந்தாலும், அந்த வார்த்தை டார்வின் மதத்தவர்களை தவறாக சித்தரிக்கின்றது என்று தாங்கள் கருதுவதால் அந்த பின்னூட்டத்தை அழித்து விட்டேன். சகோதரர் ஷாநவாஸ் சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

    இத்தோடு இந்த விஷயத்தை விட்டு விடுவோம். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ.

    ReplyDelete
  35. சகோதரர் ஷாநவாஸ்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்களுடைய பின்னூட்டம் பரிணாம மதத்தவரை தவறாக சொல்லுவதாக ஒரு சகோதரர் சுட்டி காட்டியதால் அதனை அழித்து விட்டேன். தாங்கள் அந்த கமெண்டை "அந்த வார்த்தையை" தவிர்த்து விட்டு மறுபடியும் (தாங்கள் விருப்பப்பட்டால்) அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  36. அஸ்ஸலாமு அலைக்கும். எப்படியோ டார்வினிசம் என்பது ஒரு மதம் என்று ஒத்து கொண்ட அனானிக்கு நன்றி. உலகில் எத்தனையோ நம்பிக்கைகள் உள்ளது. அதில் இந்த மதமும் ஒன்று. ஒரு முஸ்லிமாக எனக்கு பிற மதங்கள் குறித்த போதனை. (அவர்கள் வணங்கும் இறைவன் அல்லாதவைகளை திட்டாதீர்கள்.அவ்வாறு செய்தால் அறிவில்லாமல் அவர்கள் இறைவனை திட்டுவார்கள்.) இதுவே.ஆகையால் தங்களிடம் 'அல்லக்கைகள்' என்ற வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
    அதே நேரத்தில்,அனானி அவர்கள் மதத்தின் கொள்கை கோட்பாடுகள் என்ன என்று விளக்க கடமைப்பட்டுள்ளார்.தலைமறைவாகிவிடமாட்டார் என எண்ணுகிறேன்.

    ReplyDelete
  37. ஆத்தாடி...தெரியாம வந்துட்டேண்டா சாமி...

    ReplyDelete
  38. சகோதரர் சீனு,

    அஸ்ஸலாமு அலைக்கும்

    ----
    ஆத்தாடி...தெரியாம வந்துட்டேண்டா சாமி..
    -----

    ஹா ஹா ஹா ....நல்ல நகைச்சுவை உணர்வு சகோதரரே உங்களுக்கு. அடுத்த முறை தெரிந்தே வந்து விடாதீர்கள்

    நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  39. mohamed ribnas
    அஸ்ஸலாமு அலைக்கும்,
    அல்ஹம்துலில்லாஹ்,அருமையான பதிவு

    ReplyDelete