Monday, March 7, 2011

விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...



நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன். 

சென்சிடிவ்வான தகவல்கள் அடங்கிய பதிவு. படிப்பவர் கவனம் பரிந்துரைக்கப்படுகின்றது. 

வரலாற்றில் நடந்த சில சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சி தரக்கூடியவை. இந்த பதிவில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளும்  அத்தகைய ரகத்தை சார்ந்தவைதான். 

"பெண்களே நீங்கள் உடலாலும், அறிவாலும் ஆண்களை விட கீழானவர்களே" - யார் தெரியுமா இப்படி கூறியவர்கள்?.....விஞ்ஞானிகள்...ஆம் விஞ்ஞானிகளே தான். அதிலும் பிரபல விஞ்ஞானிகள்.... 

உங்களுக்கு இது அதிர்ச்சியை தரலாம். இவ்வளவு முக்கிய தகவலை நாங்கள் இது வரை கேள்விப்பட்டதில்லையே என்றும் உங்களில் சிலர் எண்ணலாம்.  வரலாற்றில் பல செய்திகள் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டிருப்பது புதிதில்லையே...

விஞ்ஞானிகள் சொன்னார்களா?...அவர்கள் நன்கு ஆராயாமல்  எதையும் சொல்லமாட்டார்களே என்று நீங்கள் கேட்கலாம். உங்களுடைய கருத்து சரிதான். 'ஆண்களை விட தாழ்ந்தவர்கள் பெண்கள்' என்ற கருத்தை நன்கு ஆராய்ந்தே(??) கூறியவர்கள் நாம் மேலே பார்த்த விஞ்ஞானிகள்.

இவர்களுக்கு துணையாய் நின்றது பரிணாம கோட்பாடு. ஆம், இந்த அறிவியலாளர்கள் மேற்கூறிய முடிவுக்கு வர காரணமாக இருந்தது பரிணாம கோட்பாடுதான். 

எப்படி இனவெறியர்களுக்கு துணையாக நின்று இலட்சகணக்கான மக்கள் கொல்லப்பட காரணமாக பரிணாமம் இருந்ததோ, அதுபோலவே, ஆண்களை விட கீழானவர்கள் பெண்கள் என்ற கருத்துக்கு துணையாக நின்று மனரீதியாக பெண்கள் கொல்லப்பட காரணமாய் இருந்தது பரிணாம கோட்பாடு. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? 

கொரில்லா குரங்குகளின் மூளைகளுக்கு நிகரானது பெண்களின் மூளை என்று கருத்து கூறிய பிரபல விஞ்ஞானிகள் கூட உலகில் உண்டு என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? மனைவி என்பவள் நாயை விட மேலானவள் என்று டார்வின் கூறினாரே, இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?      

"ஆண்களை விட அறிவுத்திறனிலும், உடல் வலிமையிலும் நீங்கள் தாழ்ந்தவர்களே" என்று பெண்களை நோக்கி அறிவியல் ரீதியாக விளக்கம் கொடுத்து, அவர்களை "நாம் கீழானவர்களே" என்று உளவியல்ரீதியாக நம்பவைத்து கேவலப்படுத்தியது பரிணாம கோட்பாடு.    

ஆணாதிக்கம்...ஆணாதிக்கம் என்று பெண்ணுரிமைக்காக கூப்பாடு போடும் பரிணாம ஆதரவாளர்கள், தற்போது அதி விரைவாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அந்த ஆணாதிக்கத்திற்கு அறிவியல் ரீதியாக தீனி போட்டு வளர்த்ததில் பரிணாம கோட்பாட்டிற்கு முக்கிய பங்குண்டு என்பதைத்தான். 'பெண்ணை விட உயர்ந்தவன் ஆண்' என்பதை அழுத்தம் திரூத்தமாக சொன்னவர்களில் டார்வினும் உண்டு என்பத்தைத்தான்.

ஆதாரங்களே இல்லாத, ஒரு யூகமாக இருக்க கூட தகுதி இல்லாத பரிணாம கோட்பாடு, இவ்வுலகிற்கு பரிசாக தந்த சீர்கேடுகளில் முக்கியமானவை...இனவெறி மற்றும் பெண்ணடிமைத்தனம். 

மனிதர்களிடேயே உயர்வு தாழ்வை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தியது பரிணாம கோட்பாடு. அதுபோலவே,  பெண்ணடிமைத்தனத்தை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தியது பரிணாம கோட்பாடு. 

சரி, மேலே பார்த்ததற்கெல்லாம் என்ன ஆதாரம்? இதோ ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன.

பெண்கள் குறித்த பரிணாமத்தின் பார்வை:

பரிணாமம் குறித்த டார்வினின் இரண்டாவது புத்தகமான "The Descent of Man, and Selection in Relation to Sex" மனித பரிணாமம் குறித்து பேசுகின்றது. இதில் ஆண், பெண் வித்தியாசம் குறித்து விரிவாக விவரித்திருகின்றார் டார்வின்.

பெண்களை சொந்தமாக்கி கொள்ள ஆதிகால ஆண்கள் போராடி வந்ததாக குறிப்பிடும் டார்வின், பெண்களை கவர வெறும் உடல் வலிமை மட்டும் போதாது என்பதால் காலப்போக்கில் ஆண்கள் அறிவுத்திறனில் வளர்ச்சியடைந்ததாக குறிப்பிடுகின்றார் (Sexual Selection Hypothesis).

மேலும், தங்களுடைய மனைவியரை அடுத்தவர் கவருவதிலிருந்து காக்கவும், தன் குடும்பத்திற்கு தேவையான உணவையும் இடத்தையும் கொடுப்பதில் ஆண்கள் மும்முரமாக செயல்பட்டதால் அறிவிலும், உடல் வலிமையிலும் ஆண்கள் உயர்ந்தவர்களாக பரிணமித்து விட்டதாக கூறினார் டார்வின்.

பெண்களுக்கு இந்த தேவைகள் இல்லாததால் அவர்கள் ஆண்களை விட தாமதமாகவே  பரிணமித்ததாக குறிப்பிடுகின்றார் டார்வின்.

We may also infer, from the law of the deviation of averages, so well illustrated by Mr. Galton, in his work on 'Hereditary Genius,' that if men are capable of decided eminence over women in many subjects, the average standard of mental power in man must be above that of woman.
The half-human male progenitors of man, and men in a savage state, have struggled together during many generations for the possession of the females. But mere bodily strength and size would do little for victory, unless associated with courage, perseverance, and determined energy. With social animals, the young males have to pass through many a contest before they win a female, and the older males have to retain their females by renewed battles. They have, also, in the case of man, to defend their females, as well as their young, from enemies of all kinds, and to hunt for their joint subsistence. But to avoid enemies, or to attack them with success, to capture wild animals, and to invent and fashion weapons, requires the aid of the higher mental faculties, namely, observation, reason, invention, or imagination. These various faculties will thus have been continually put to the test, and selected. --- Charles Darwin,The Descent of Man, and Selection in Relation to Sex, 1871, Page No.327.

மொத்தத்தில், ஆண்கள் உயர்ந்தவர்கள் பெண்கள் தாழ்ந்தவர்கள். டார்வினுடைய இந்த கருத்தில் ஆச்சர்யமொன்றுமில்லை. அவரால் பிரபலமான பரிணாம கோட்பாட்டை பொறுத்தவரை, மனிதர்கள் என்பவர்கள் முன்னேறிய விலங்குகள். அவ்வளவே.

[இங்கு  மற்றொரு முக்கிய செய்தியையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பரிணாமத்தின் ஆணிவேரான இயற்கை தேர்வை கண்டுபிடித்ததில் டார்வினுடன் சேர்ந்து பெருமையை பகிர்ந்து கொள்பவர் அல்ப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் அவர்கள். அறிவியலாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் வாலஸ், டார்வினுடைய மனித பரிணாமம் குறித்த கருத்துக்களோடு உடன்படவில்லை. அதற்கு காரணம், ஒழுக்கம் மற்றும் அற்புத அறிவுத்திறனை மனித இனம் கொண்டிருந்ததுதான்.

மனிதனின் இந்த தன்மைகள் இயற்கைத் தேர்வால் வந்திருக்க வேண்டுமென்ற விளக்கத்தை நிராகரித்தார் வாலஸ். இவற்றை விளக்க இயற்கை தேர்வு ஒத்துவராது என்றும், நம்மை மீறிய ஒரு சக்தியே இவற்றிற்கு காரணமாக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார் வாலஸ். அதுமட்டுமல்லாமல், உலகின் முதல் உயிரினத்தையும் அந்த சக்தி தான் உருவாக்கியிருக்க வேண்டுமென்றும் கூறினார். வாலசின் இந்த கருத்துக்கள் டார்வின் மற்றும் அவரது ஆதரவாளர்களை மிகுந்த சங்கடப்படுத்தியது]

டார்வினுடைய ஆண் பெண் குறித்த கருத்துக்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் அமையாதவை. எப்படி இன்றளவும் பரிணாமத்திற்கு ஆதாரங்களில்லையோ, அதுபோலேவே அவர் கூறிய ஆண், பெண் வித்தியாசத்திற்கும் ஆதாரங்களில்லை.

டார்வின் தன் இளமை பருவத்தில் கூறிய கருத்து, பெண்கள் குறித்த அவரது பார்வையை இன்னும் மோசமாக்குகின்றது. திருமணத்தில் உள்ள நன்மைகளை பட்டியலிடும் அவர், மனைவியின் தன்மைகள் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"...Constant companion (and friend in old age) who will feel interested in one - Object to be beloved and played with. Better than a dog anyhow - Home, & someone to take care of house..." --- Darwin Letters, Cambridge University Library.
நிரந்தரமான உடனிருப்பவர் ( வயதான காலத்தில் நண்பர்) - விரும்பப்படுவதற்கும், விளையாடுவதற்கும் ஏற்றவர். எப்படியானாலும் நாயை விட மேலானவர் - வீட்டை கவனித்து கொள்பவர்" --- (Extract from the original quote of) Darwin Letters, Cambridge University Library.



டார்வினின் இது போன்ற கருத்துக்கள் அதிர்ச்சி அளிப்பவை. தன்னுடைய கோட்பாட்டை முன்வைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் தெரிவித்த கருத்துக்கள் இவை. அவர் முன்வைத்த கோட்பாடு, அவருடைய இது போன்ற எண்ணங்களை மாற்றாமல், ஆண் பெண் உயர்வு தாழ்வுக்கு அறிவியல் ரீதியாக சாயம் பூசியது.

பரிணாம கோட்பாடு சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள்:

பிறப்பிலேயே தாழ்ந்தவர்கள் பெண்கள் என்ற கருத்தை உருவாக்கியது பரிணாமம். பெண்களை காட்டிலும் ஆண்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அறிவியலாளர்களிடையே உருவாக்கியது பரிணாமம். "அறிவியலே கூறிவிட்டது, நாங்கள் அறிவில் குறைந்தவர்களே" என்று உளவியல் ரீதியாக நம்பவைக்கப்பட்டார்கள் பெண்கள்.

சமூகத்தில் பரிணாமம் ஏற்படுத்திய விளைவு எந்த அளவு என்றால், உளவியல் ரீதியாக ஆண்கள் ஒரு இனமாகவும், பெண்கள் வேறு இனமாகவும் பார்க்கப்பட்டார்கள்.
"The year 1884 saw the publication of scientific book in which woman is called Homo parietalis and man is called homo frontilis" --- The history of science and technology: a browser's guide to the great discoveries, inventions, and the people who made them, from the dawn of time to today, Bryan H. Bunch, Alexander Hellemans, 2004, Page No:419. 
1884 ஆம் ஆண்டு வெளியான ஒரு அறிவியல் புத்தகத்தில் பெண்கள் Homo parietalis எனவும், ஆண்கள் homo frontilis எனவும் அழைக்கப்பட்டார்கள் --- The history of science and technology: a browser's guide to the great discoveries, inventions, and the people who made them, from the dawn of time to today, Bryan H. Bunch, Alexander Hellemans, 2004, Page No:419.  

பெண்கள் தாழ்ந்தவர்களாக சித்தரிக்கப்பட டார்வினுக்கு எந்த அளவு பங்குண்டோ அதே அளவு பால் ப்ரோகா (Paul Broca) என்ற பிரபல பிரெஞ்சு விஞ்ஞானிக்கும் உண்டு. இவர் என்ன செய்தாரென்றால், மனிதர்களின் மூளையை எடை போட்டு பெண்களை விட ஆண்களே உயர்ந்தவர்கள் என்று கூறினார்.

இவருடைய இந்த ஆய்வு சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

பாரிசில் உள்ள நான்கு மருத்துவமனைகளில் தனிப்பட்ட முறையில் ஆய்வு நடத்தினார் ப்ரோகா. சுமார் 292 ஆண் மூளைகளை ஆய்வு செய்த அவர், அந்த மூளைகளின் சராசரி எடை சுமார் 1,325 கிராம்கள் என கண்டறிந்தார். பின்னர், சுமார் 192 பெண் மூளைகளை ஆராய்ந்த ப்ரோகா, அவற்றின் சராசரி எடை சுமார் 1,144 கிராம்கள் என கண்டறிந்தார். ஆக, ஆண்களுடைய மூளைக்கும், பெண்களுடைய மூளைக்கும் சுமார் 181 கிராம்கள் வித்தியாசம். தன்னுடைய ஆய்வு முடிவுகள் 'ஆண்களே அறிவுத்திறனில் உயர்ந்தவர்கள்' என்ற கூற்றை நிரூபிப்பதாக கூறினார் ப்ரோகா.

1873 ஆம் ஆண்டு, L'Homme Mort என்னும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆதிகால மனித மண்டையோடுகளை ஆராய்ந்தார் ப்ரோகா. இந்த ஆய்வின் மூலம் அவர் கண்டறிந்தது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருந்த மண்டையோடு கொள்ளளளவு வித்தியாசம் சுமார் 99.5 cubic centimeters. இன்றைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கக்கூடிய கொள்ளளவு வித்தியாசம் சுமார் 129.5  to  220.7 cubic centimeters.

ஆக, கொள்ளளவு வித்தியாசங்கள் அதிகரித்திருப்பது, பெண்களை விட ஆண்கள் வேகமாக பரிணமித்திருப்பதற்கு ஆதாரம் என எண்ண தொடங்கினர் ப்ரோகாவின் குழுவினர். இதனை தெளிவாக அறிவிக்கவும் செய்தனர்.

'அறிவுத்திறனில் தாங்கள் தாழ்ந்தவர்களே' என்று அறிவியல் ரீதியாக நம்பவைக்கப்பட்டார்கள் பெண்கள்.

ப்ரோகாவின் குழுவில் இருந்த L.Manouvrier என்பவர், பெண்கள் குறித்த ப்ரோகாவின் கருத்துக்களை நிராகரித்தார். இந்த ஆய்வு குறித்து வேதனையுடன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் L. Manouvrier,

"The  theologians  had  asked  if women had a soul. Several centuries later, some scientists were  ready  to  refuse  them  a  human intelligence" ---  L.Manouvrier, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.    
பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா என்று கேட்டனர் வேத விற்பன்னர்கள். பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, சில விஞ்ஞானிகள், பெண்களுக்குண்டான அறிவுத்திறனை மறுக்க தயாராக இருக்கின்றனர் ---  (Extract from the original quote of) L.Manouvrier, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.

ப்ரோகா தோற்றுவித்த பள்ளியின் தலைமை அறிவியலாளர்களில் ஒருவரான ல பான் (Le Bon) வரலாற்றில் முக்கிய விஞ்ஞானியாக அறியப்படுபவர். ப்ரோகாவின் ஆய்வு தகவல்களை உபயோகப்படுத்தி இவர் எழுதிய கட்டுரையை பிரான்சின் மதிப்புமிக்க அறிவியல் ஆய்விதழ் 1879 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதில் மிக மோசமான, அப்போதைய அறிவியல் உலகம் காணாத நச்சு கருத்தை தெரிவித்திருந்தார் ல பான்.

(பின்வரும் பத்தி மிக மிக சென்சிடிவான தகவல்களை கொண்டது. விரும்பாதவர்கள் பின்வரும் பத்தியை தாண்டி செல்லவும்)
"In  the  most  intelligent  races,  as  among  the Parisians,  there  are  a  large  number  of  women whose  brains  are  closer  in  size  to  those  of gorillas than to the most developed male brains. This  inferiority  is  so  obvious  that  no  one  can contest it for a moment; only its degree is worth discussion. All psychologists who have studied the intelligence of women, as well as poets and novelists, recognize today that they represent the most inferior forms of human evolution and that they are closer to children and savages than to an adult,  civilized  man.  They  excel in  fickleness, inconstancy, absence of thought and logic, and incapacity to reason. Without doubt there exist some distinguished women, very superior to the average man, but they are as exceptional as the birth  of  any monstrosity,  as,  for  example,  of  a gorilla  with two  heads;  consequently,  we  may neglect them entirely" --- Le Bon, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159. 
"பாரிஸ் மக்களை போன்ற அறிவில் சிறந்த இனத்தில், நிறைய பெண்களின் மூளைகள், நன்கு வளர்ந்த ஆணின் மூளையை விடவும், கொரில்லாக்களின் மூளையையே ஒத்து வருகின்றது. இது எதிர்க்க முடியாத உண்மை. பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்த உளவியல் நிபுணர்கள் அனைவரும் இன்று உணர்ந்து கொள்ள ஆரம்பித்திருப்பது என்னவென்றால், பரிணாமத்தின் படி அவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதைத்தான்.
பெண்களின் அறிவுத்திறன், நாகரிகம் அடைந்த மனிதனை ஒத்திருப்பதை காட்டிலும், குழந்தைகளையும் காட்டுமிராண்டிகளையுமே ஒத்திருக்கின்றது. சபலத்திலும், நிலையாமையிலும், சிந்திக்க தெரியாமல் இருப்பதிலும், கேள்வி கேட்பதில் திறமையில்லாமல் இருப்பதிலும் பெண்கள் மேம்பட்டிருக்கின்றனர்.
நிச்சயமாக, சராசரி மனிதனை விட (அறிவில்) உயர்ந்த சில பெண்கள் இருக்கின்றனர். எப்படி இரண்டு தலை கொண்ட கொரில்லாக்கள் பிறக்கின்றனவோ அதுபோலவே இவர்களும் விதிவிலக்கானவர்கள். ஆகையால், இவர்களை முற்றிலுமாக நிராகரித்து விடலாம்" --- Le Bon, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.

ல பானின் இந்த கருத்துக்கள் எரிச்சலூட்டுபவை. ஆனால் இதே போன்றதொரு கருத்தை தான் டார்வினும் கொண்டிருந்தார். பெண்களின் சில பழக்க வழக்கங்கள் கீழ்நிலை இனங்களோடு ஒத்துபோவதாக கூறியவர் அவர்.  அதுமட்டுமல்லாமல், நாகரிகத்தில், தாழ்வான நிலையிலேயே பெண்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டவர் டார்வின்...
"It is generally admitted that with woman the powers of intuition, of rapid perception, and perhaps of imitation, are more strongly marked than in man; but some, at least, of these faculties are characteristic of the lower races, and therefore of a past and lower state of civilisation" --- Charles Darwin, The Decent of Man, 1871, Page No. 326-327.
ல பான் இதோடு நிறுத்தவில்லை. பெண்களுக்கு உயர் கல்வி தரும் அமெரிக்க சீர்திருத்தவாதிகள் சிலரது திட்டத்தையும் கேள்வி கேட்டார். இயற்கை பெண்களுக்கு கொடுத்துள்ள தாழ்வான நிலையை தவறாக புரிந்து கொள்ள கூடாதென்றும், ஆண்களுக்கு நிகராக அவர்களுக்கு கல்வி கொடுக்கப்பட்டால் சமூக புரட்சி நடந்து குடும்ப பிணைப்புகள் பாதிக்கப்படும் என்றும் கூறினார்.

பான் போல தங்களது சொந்த கருத்துக்களுக்கு ஆதரவாக அறிவியலை வளைத்து கொண்ட அறிவியலாளர்கள் அன்று இருந்தனர்.

உதாரணத்திற்கு, மனிதனுடைய புத்திசாலித்தனம், மூளையின் "frontal lobe" பகுதியை சார்ந்தே அமைந்திருக்கின்றது என சில விஞ்ஞானிகள் எண்ணினர். பின்னர், பெண்களுடைய frontal lobe பகுதி ஆண்களை விட பெரியது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தங்களுடைய எண்ணத்தை மாற்றி கொண்டனர். அதாவது, புத்திசாலித்தனதுக்கு Frontal Lobe காரணமல்ல, Parietal Lobe பகுதியே காரணமாக இருக்க வேண்டுமென்று தங்களது எண்ணத்தை மாற்றி கொண்டனர்.

(ஒருவேளை, பெண்களின் மூளை ஆண்களை விட பெரியது என்று கண்டுபிடித்திருந்தால், புத்திசாலித்தனத்துக்கும் மூளைக்கும் சம்பந்தமில்லை என்று முடிவு கட்டியிருப்பார்கள் போல...)

பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் டார்வின் முதற்கொண்டு அன்றைய விஞ்ஞானிகள் பலருக்குள்ளும் நன்கு பதிந்திருந்ததால், தங்களது எண்ணங்களுக்கு ஏற்றவாறு தான் அறிவியலை அணுகினார்களே தவிர தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் அல்ல.          

இன்றைய சூழல்: 

உயரம், பருவம் ஆகியவையை சார்ந்து(ம்) மூளையின் அளவு வேறுபடும். இன்றைய மனிதர்களிலேயே கூட மூளையின் அளவில் நிறைய வேறுபாடு உண்டு. ஆக, மூளையின் அளவை கொண்டு அறிவுத்திறனை கணக்கிடுவதெல்லாம் இன்றைய அறிவியலுக்கு ஒத்துவராதது. அவை தவறென நிரூபிக்கப்பட்டவை. ப்ரோகா முதற்கொண்டு பல விஞ்ஞானிகளின் பெண்கள் குறித்த ஆய்வுகளை "non-sense" என்று கூறுகின்றது இன்றைய அறிவியல்.

அதுபோல, ஆண் பெண் வித்தியாசம் குறித்த டார்வினின் கூற்றுக்கும் ஆதாரங்கள் இல்லை.  இருந்தாலும், டார்வின் அறிமுகப்படுத்திய Sexual Selection Hypothesis இன்றளவும் ஆண், பெண் வித்தியாசங்களுக்கான சிறந்த விளக்கமாக பார்க்கப்படுவதாக விக்கிபீடியா கூறுகின்றது.

அவ்வப்போது அறிவுத்திறன் குறித்த சர்ச்சைகள் தோன்றி கொண்டுதான் இருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் தலைவர் லாரான்ஸ் சம்மர்ஸ் (Lawrence Summers) மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். அறிவியல் மற்றும் கணக்கு துறைகளில் பெண்கள் (அதிக அளவில்) வெற்றி பெற முடியாததற்கு காரணம், அவர்கள் பிறப்பிலேயே அப்படித்தான் என்று அவர் கூறினார். ஆம், அன்று டார்வின் கொண்டிருந்த அதே கருத்துக்கள் இன்று சம்மர்ஸ் வாயிலிருந்து வந்து விழுந்தன. 

டென்மார்க்கை சார்ந்த பிரபல மனோதத்துவ நிபுணரான ஹெல்முத் நைபோர்க் (Helmuth Nyborg) பெரும் சர்ச்சையை சில ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தினார். சர்ச்சைக்கு காரணம், "Personality and Individual Differences" என்ற அறிவியல் ஆய்விதழில் வெளிவந்த அவருடைய ஆய்வு கட்டுரை. அந்த கட்டுரையில், பெண்களை விட ஆண்களே அறிவில் சிறந்தவர்கள் என்று தன்னுடைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இது மிகுந்த எதிர்ப்புகளை சந்திக்க, தன்னுடைய பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார் நைபோர்க். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நைபோர்க்கின் ஆய்வில் எந்த தவறுமில்லை என்று அவருக்கு ஆதரவாக பல ஆய்வாளர்கள் திரண்டது தான்.

நைபோர்க் சர்ச்சைகளில் சிக்கியது இது முதல் முறையல்ல. கருப்பினத்தரை விட வெள்ளை இனத்தவரே அறிவில் சிறந்தவர்கள் என்று ஏற்கனவே கருத்து கூறியிருந்தவர் நைபோர்க்.

நைபோர்க்கின் கருத்துக்களை உற்று நோக்குங்கள். டார்வினின்  பார்வைகளும் இப்படித்தான் இருந்தன.  

ஆக, இன்றளவும் இந்த சர்ச்சைகள் குறையவில்லை. பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறும் பிரபல ஆய்வாளர்கள் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆணாதிக்கத்திற்கு துணை போய் கொண்டு தான் இருக்கின்றனர்.

முடிவாக: 

வரலாற்றை ஆழ்ந்து நோக்கும் யாருக்கும் தெரியவரும் உண்மை என்னவென்றால், பெண்ணடிமைத்தனத்திற்கு சமூகம் மட்டுமே காரணமல்ல, விஞ்ஞானிகளும் காரணம் என்பதுதான். 

அந்த விஞ்ஞானிகளுக்கு உறுதுணையாக இருந்து, பெண்களை உளவியல் ரீதியாக காயப்படுத்தியது பரிணாமம் என்ற ஆதாரமில்லாத கோட்பாடு தான்.

உண்மைகள் வரலாற்றில் மறைத்திருக்கப்படலாம். ஆனால் அவை நிரந்தரமாக மறைந்திருக்காது.

ஆணாதிக்கத்தை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தி, ஆணாதிக்க சமூகத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்தது பரிணாம கோட்பாடு. பெண்ணடிமைத்தனத்தை போற்றி வந்த மனிதர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது பரிணாம கோட்பாடு.

"Charles darwin believed in general female inferioty in reasoning, creative imagination, and so on...A refinement of the 'inferiority' theme took shape with the development  of evolutionay theory in the mid-19 century" - Judith Worell, Encyclopedia of women and gender: sex similarities and differences and the impact of society on gender, Volume 1, 2001, Page No.595.
படைப்பு திறன், கேள்வி கேட்கும் திறன் என இன்னும் பல பிரிவுகளில் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை டார்வின் கொண்டிருந்தார்...  
பரிணாம கோட்பாடு வளர்ச்சி பெற ஆரம்பிக்க '(பெண்கள்) தாழ்ந்தவர்கள்' என்ற கருத்தும் வடிவம் பெற ஆரம்பித்தது" -  (Extract from the original quote of) Judith Worell, Encyclopedia of women and gender: sex similarities and differences and the impact of society on gender, Volume 1, 2001, Page No.595.  

எப்படி தன் இனவெறிக்கு பரிணாமத்தை காரணமாக காட்டி நியாயம் கற்பித்தாரோ ஹிட்லர், அதுபோலவே, பெண்கள் குறித்த தங்களது பாரபட்சமான கருத்துக்களுக்கு காரணமாக ஆய்வாளர்கள் கை நீட்டியது பரிணாம கோட்பாடை நோக்கி தான்.

அறிவியல் கருத்துக்கள் மாறக்கூடியவை. மூளையின் அளவை கொண்டு அறிவுத்திறனை(??) கணக்கிட்டார்கள் என்றால் அது அன்றைய தவறான புரிதல். அதுபோலவே, பரிணாம கோட்பாட்டிற்கு ஆதாரங்கள் இருப்பதாக அன்று நம்பினர். பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக அந்த ஆதாரங்கள் ஒன்றுமில்லாமல் ஆகி, இன்றோ, அதற்கு நேர்மாறான நிலைமையல்லவா இருக்கின்றது!!!

பரிணாம ஆதரவாளர்களிடம் மீண்டும் நான் கேட்டு கொள்வதெல்லாம், திறந்த மனதோடு பரிணாம கோட்பாட்டை ஆராய முன்வாருங்கள் என்பதுதான். பரிணாமத்தால் மனித சமுதாயம் அடைந்த பயன் என்று ஒன்றுமில்லை. அறிவியல் போர்வையில் தவறான தகவல்கள், இனவெறி, பெண்கள் தாழ்த்தப்பட்டது (and etc) என இவைதான் பரிணாம கோட்பாடு நமக்கு கொடுத்த பரிசுகள்.

பெண்ணுரிமை ஆர்வலர்கள் எதிர்த்து போராட வேண்டியது ஆணாதிக்க சமூகத்தை மட்டுமல்ல, அவர்களுக்கு துணை போய் கொண்டிருக்கும் ஆய்வாளர்களை எதிர்த்தும் தான்...

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான் - (குரான் 33:35)

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...  

References:
1. The Descent of Man - Charles Darwin, 1871, Page No.326 - 328. link
2. The Panda's thumb - Stephen Jay Gould, 1980, W.W. Norton, Page No. 152-159. link
3. The history of the human female inferiority ideas in evolutionary biology - Bergman G, U.S. National Library of Medicine. link
4. Encyclopedia of women and gender: sex similarities and differences and the impact of society on gender - Judith Worell, Volume 1, 2001, Page No.595.
5. The history of science and technology - Bryan H. Bunch & Alexander Hellemans, Houghton Mifflin Harcourt, 2004, Page No.419.
6. Charles Darwin, Alfred Russel Wallace, and the Evolution / Creation of the Human Brain And Mind - Stephen E. Glickman, Departments of Psychology and Integrative Biology, University of California, Berkeley, USA. link
7. Summers' remarks on women draw fire - The Boston Globe,  January 17, 2005. link
8. Sex-related differences in general intelligence g, brain size, and social status - Helmuth Nyborg, Science Direct, 8th June 2005. link
9. Sexual Selection - evolution.berkeley.edu. link
10. Helmuth Nyborg - Wikipedia. link
11. The Descent of Man - Wikipedia. link
12. Sexual Selection - Wikipedia. link
13. Alfred Russel Wallace - Wikipedia. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ






37 comments:

  1. அண்ணே ..வணக்கம்ணே..
    இந்த விஞ்ஞானிகள்ளாம் ஆரு நம்மை மாதிரி மன்சாள் தானே. அவிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் பெருசா வித்யாசம் கடியாது.

    தங்களோட கருத்தை தாங்களே மாத்தி சொல்வாய்ங்க. நான் சொல்றேன். நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஆனர்.

    பெண் இயற்கையின் பிரதி. நிதி. பிரதி நிதி. பெண்ணை புரிஞ்சிக்கிட்டவனுக்கு இன்செக்யூரிட்டி கிடையாது.ஈகோ கிடையாது.

    வன்முறை,பணம்,பதவி இத்யாதி மேல வெறி கிடையாது. மேலும் இயற்கையின் பால் அவனுக்குள்ள பொங்கற நன்றி உணர்வு இந்த உலகத்தையே ஆன்மீகப்பாதைக்கு திருப்பும். அமைதி நிலவும். சுபிட்சம் பெருகும்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......,
    அறிவியலாளர்கள், ஆலிம்கள் என்போர் எதை வேண்டுமானலும் சொல்வார்கள் அவர்கள் சொல்வதைப்ற்றி நம்மிடம் அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான். அவர்கள் சொல்வதில் உண்மையுள்ளதா இல்லையா, என்பதை ஆய்வு செய்து அழகானதை நாம் பின்பற்றினால் நமக்கு நேர்வழிகிடைக்கும் என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.

    "அவர்கள் சொல்லைக் கேட்டு, அவற்றில் அழகானதைப் பின்பற்றுவார்கள்: (முட்டாள் தனமாக கூறியதையும், அசிங்கங்களையும் பின்றபற்றமாட்டார்கள்) அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியது இத்தகையோரைத்தான். இவர்களே அறிவுடையவர்கள்" அல்குர்ஆன் 39:18

    ReplyDelete
  3. சகோதரர் முருகேசன்,

    உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும். சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்

    விஞ்ஞானிகளும் மனிதர்கள். அவர்களும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு செயல்படுவார்கள் என்பதை புரியாத சிலரை குறி வைத்தே இந்த பதிவு...தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  4. சகோதரர் ஏருவாடி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    ----
    அவர்கள் சொல்வதில் உண்மையுள்ளதா இல்லையா, என்பதை ஆய்வு செய்து அழகானதை நாம் பின்பற்றினால் நமக்கு நேர்வழிகிடைக்கும் என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.
    -----

    அல்ஹம்துலில்லாஹ்...

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......,


    //பெண்ணுரிமை ஆர்வலர்கள் எதிர்த்து போராட வேண்டியது ஆணாதிக்க சமூகத்தை மட்டுமல்ல, அவர்களுக்கு துணை போய் கொண்டிருக்கும் ஆய்வாளர்களை எதிர்த்தும் தான்... //

    படித்தவுடன் இப்படியுமா? என்று அதிர்ச்சியுடன் துள்ள வைக்கும் பதிவு.

    விந்தையாக தோன்றும் இவ்வுண்மையை ஆதாரத்துடன் ஆணி அடித்து அறிவிக்கும் "ஆஷிக் அஹ்மத்" ன் பதிவு போற்றத்தக்கது.

    பெண்ணுரிமை ஆர்வலர்களின் சிந்தனைகளுக்கு மற்றுமோர் போராடு தளத்தை இணைத்து விட்டது "ஆஷிக் அஹ்மத்" ன் பதிவு.

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

    ReplyDelete
  6. வாஞ்சூர் அவர்களுக்கு,

    வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)

    ------------
    படித்தவுடன் இப்படியுமா? என்று அதிர்ச்சியுடன் துள்ள வைக்கும் பதிவு
    ------------

    உண்மைகள் நீண்ட நாட்கள் மறைந்து இருக்காது...அவை வெளிவந்தே தீரும்...எல்லாப் புகழும் இறைவனிற்கே..

    முதன் முதலில் இந்த செய்திகளை பார்த்த போது மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றார்கள்? தங்களுக்குள்ளாக ஒரு எண்ணத்தை உருவாக்கி கொண்டு அதற்கு ஏற்றார்போல அறிவியல் கருத்துக்களை வடிவமைத்து.....சொல்லவே சங்கடமாக இருக்கின்றது...

    தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோ.ஆஷிக் அஹ்மத்,
    கலக்கலான அதிரடியான பதிவு.

    போலி விஞ்ஞானிகளையும் போலி விஞ்ஞான நம்பிக்கைகளையும் அடிச்சு தொவைச்சு கசக்கி புழிஞ்சு உதறி விரிச்சு கொடியிலே காயப்போட்டு கிளிப் மாட்டி விட்டுட்டீங்க...

    இனி டார்வின் அடிவருடிகள் எல்லாம் ஆணாதிக்கவாதிகளா... அடாடா...

    இனி ஒவ்வொருமுறை அவர்கள் பரிணாமத்தை ஆதரித்து எழுதும்போதும் கொரில்லா வந்து அவர்கள் கண்ணை குத்துமே...அடாடா...

    மிக அருமையான தெளிவான நுணுக்கமான அறிவியில் ஆய்வுடன் கூடிய 'நச்' பதிவு.

    எங்கே... பரிணாம ஆதரவாளர்கள்..?
    எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்..!
    மைக் தயாராக உள்ளது உங்களுக்காக..!

    ReplyDelete
  8. விஞ்ஞானிகளின் முகத்திரை அழகிய தமிழpல் பதிவு செய்த சகோ.ஆஷிக் அஹ்மத் அவர்களுக்கு நன்றியும் துவாக்களும்,மேலும் இது போன்ற நல்ல பயன் உள்ள பதிவுகளை எமுத எல்லாம் வல்ல அல்லாவிடம் துவா செய்தவனாக .. ஆமீன் .

    உங்கள் சகோதரன்
    சாதிக். ..

    ReplyDelete
  9. மிகச் சிறந்த பதிவு. இதற்கு எதிர்க் கருத்து உடைய பரிணாம ஆதரவாளர்கள் என்ன கருத்தை அறிவியல் ரீதியாக வைக்கிறார்கள் என்று பார்ப்போம். இது போன்ற அறிவுக்கு விருந்தாக பல பதிவுகளையும் இட வேண்டும். வாழ்த்துக்கள் தோழரே!

    ReplyDelete
  10. சகோதரர் சாதிக்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    -----
    மேலும் இது போன்ற நல்ல பயன் உள்ள பதிவுகளை எமுத
    -----

    இன்ஷா அல்லாஹ்...தங்களுடைய துவாவிற்கு மிக்க நன்றி சாதிக்

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  11. சகோதரர் சுவனப்பிரியன்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    -----
    இதற்கு எதிர்க் கருத்து உடைய பரிணாம ஆதரவாளர்கள் என்ன கருத்தை அறிவியல் ரீதியாக வைக்கிறார்கள் என்று பார்ப்போம்
    -----

    நானும் எதிர்ப்பார்கின்றேன் சுவனப்பிரியன். நீங்கள் சாதாரணமாக சொல்லி விட்டீர்கள். ஆனால் தங்களுக்கு ஆதரவாக எதையாவது கொண்டு வர அவர்கள் மிகவும் மெனக்கெட வேண்டும். நிச்சயமாக வரலாற்றில் நடந்ததை மாற்ற முடியாது. இப்போதைய எண்ணங்கள் அப்படி கிடையாது என்று வேண்டுமானால் வாதத்தை வைக்கலாம். அப்படி வைத்தால், காத்து கொண்டிருக்கின்றேன் சில/பல கேள்விகளை எடுத்து போட...இன்ஷா அல்லாஹ்..

    ----
    இது போன்ற அறிவுக்கு விருந்தாக பல பதிவுகளையும் இட வேண்டும்.
    ----

    இன்ஷா அல்லாஹ்... எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  12. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,

    என்னுடைய பதிவை விட உங்களுடைய பின்னூட்டம் தான் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் போல

    -----
    எங்கே... பரிணாம ஆதரவாளர்கள்..?
    -----

    இன்ஷா அல்லாஹ்...வருவார்கள். சகோதரர் சுவனப்பிரியன் அவர்களுக்கு நான் தந்த பதிலை சற்று பார்த்து விடுங்கள்.

    ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. இவற்றிற்கு பரிணாமம் என்ன பதில் வைத்திருக்கின்றது? டார்வின் கூறியது இன்றளவும் ஏற்றுக்கொள்ளபடுவதாக விக்கிபீடியா கூறுகின்றது. அப்படியானால்??????

    இல்லை ஆண் பெண் வித்தியாசத்திற்கு புது விளக்கம் எதையாவது வைத்திருக்கின்றார்களா பரிணாமவியலாளர்கள்? அப்படி இருந்தால் அதற்கு என்ன ஆதாரம்???

    இப்படி பல முக்கிய கேள்விகளுக்கு ஆதாரத்துடன் கூடிய விளக்கங்கள் கிடையாது...ஆனால் பரிணாம் மட்டும் "உண்மை".....

    ஒன்றும் சொல்லுவதற்கில்லை....

    தங்களது கருத்துக்களுக்கு நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  13. Brother Muhammed Ashik,

    assalaamu alaikum,

    ---------
    போலி விஞ்ஞானிகளையும்
    -----------

    The concept that they try to endorse is "poli" and but they are not "poli" scientists...

    Hope you understand,

    Your brother,
    Aashiq Ahamed

    ReplyDelete
  14. Salaam ji,

    அப்படிப்பார்த்தால் தமிழகத்தில் வருடாவருடம் நடக்கும் 10 மற்றும் 12 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடத்தையும் பெண்களே வகிப்பது எப்படி? தேர்வில் பாஸாகும் சதவிகிதமும் பெண்களே அதிகம் இது எப்படி? பதில் சொல்வார்களா அறிவியலார்கள்? அல்லது இப்படி சொல்வாய்ங்களோ தமிழ் நாட்டுல மட்டும் அறிவுள்ள மனித குரங்கிலிருந்தா வந்தார்கள் என்று மடையர்கள்..........

    ReplyDelete
  15. Wa alaikum salaam உங்களில் ஒருவன்,

    (sorry tamil transliteration problem)

    --------
    அப்படிப்பார்த்தால் தமிழகத்தில் வருடாவருடம் நடக்கும் 10 மற்றும் 12 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடத்தையும் பெண்களே வகிப்பது எப்படி? தேர்வில் பாஸாகும் சதவிகிதமும் பெண்களே அதிகம் இது எப்படி?
    --------

    imm...You struck the nail on somebody's head. It was simply a prejudice that was shown towards women by those scientists. nothing to tell...very irritating..

    thanks

    your brother,
    aashiq ahamed

    ReplyDelete
  16. வஜீர் அலி அஹ்மதுThursday, March 10, 2011

    சகோதரர் ஆஷிக் அஹ்மத் அ,

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

    அல்ஹம்துலில்லாஹ், அருமையான பதிவு....

    இதில் என்ன ஆச்சரியம் என்றல் இந்த விஞ்ஞானிகளின் இதுமாதிரியான கருத்துகள்/ஆய்வுகள் நமக்கு சந்தேகத்தை ஏற்ப்படுதியத்தின் காரணத்தினால் அவரின் மற்ற கருத்துகள்/ஆய்வுகளும் உண்மையானவையா?? என்றும் அவரை ஆதரிக்கும் மற்ற மனிதர்களின் கருத்துக்களும்(பரிணாம ஆதரவாளர்கள்),விஞ்ஞானிகளின் கருத்துகள்/ஆய்வுகள் உண்மையானவைய என்று நம்மை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது......

    கருத்துக்களை விடுங்க இவர்கள்(பரிணாம ஆதரவாளர்கள்) எதார்த்த பேச்சுக்களையும் சகோதரர் ஆஷிக் அஹ்மத்-போல் ஆராயனும் போல!!!!!!!

    ReplyDelete
  17. சகோதரர் வஜீர் அலி அஹ்மத்,

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு,

    ------
    விஞ்ஞானிகளின் கருத்துகள்/ஆய்வுகள் உண்மையானவைய என்று நம்மை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது......
    --------

    விஞ்ஞானிகளும் மனிதர்கள் தான். அவர்களும் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு செயல்படுவார்கள். உங்களுடைய சந்தேகம் நியாயமானது தான். ஆனால் ஒருவர் ஒரு விசயத்தில் தவறு செய்தால் அனைத்து விசயங்களிலும் தவறு செய்வார் என்று சொல்ல முடியாது. ஆம் சந்தேகம் வரத் தான் செய்யும். அது இயல்புதான்.

    -------
    இவர்கள்(பரிணாம ஆதரவாளர்கள்) எதார்த்த பேச்சுக்களையும்
    -------

    ஆராயத்தான் வேண்டும். நாத்திகர்களிடம் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன. அவற்றில் "ஒழுக்கம்" குறித்த கேள்வி முக்கியமானது. எதற்க்காக அவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்? நாம் மறுமை குறித்து அஞ்சுகின்றோம், அதனால் இறைவன் சொல்படி நடக்கின்றோம். அவர்கள் பார்வையில் மனிதர்கள் எல்லோரும் விலங்குகள் தானே? பிறகு எதற்கு 'ஒழுக்கம்' மற்றும் இன்ன பிற செயல்கள். தாங்கள் விரும்பிய படி நடக்கலாமல்லவா?

    கேட்க நிறைய இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் ஒரு பதிவாக போட்டு கேட்போம்...

    எனக்காக துவா செய்யுங்கள். உங்கள் கருத்துகளுக்கு நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  18. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    மாஷா அல்லாஹ் தகுந்த ஆதாரங்களோடு அருமையான பதிவு

    இதையேல்லாம் பரிணமத்த நம்புற நாத்திகர்கள் சொல்லவே இல்லையே ஏன்?

    //கொரில்லா குரங்குகளின் மூளைகளுக்கு நிகரானது பெண்களின் மூளை என்று கருத்து கூறிய பிரபல விஞ்ஞானிகள் கூட உலகில் உண்டு என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? மனைவி என்பவள் நாயை விட மேலானவள் என்று டார்வின் கூறினாரே, இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?//


    தொடர்ந்து இது போன்ற விஷயங்களை வெளிக் கொண்டு வாருங்கள் சகோ

    நன்றி சகோ

    ReplyDelete
  19. சகோதரர் ஹைதர் அலி,

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்...

    --------
    இதையேல்லாம் பரிணமத்த நம்புற நாத்திகர்கள் சொல்லவே இல்லையே
    ----------

    எப்படி சொல்வாங்க?

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  20. பெண்கள் எடையிலும், வலிமையிலும்,திறமையிலும் ஆண்களை விட எப்பொழுதும் குறைந்தவர்கள் என்று அறிஞர்கள் சொல்வது பொய் என்கிறீர்களா அல்லது உண்மை என்கிறீர்களா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்

    ReplyDelete
  21. சகோதரர் சந்துரு அவர்களுக்கு,

    உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    -------
    பெண்கள் எடையிலும், வலிமையிலும்,திறமையிலும் ஆண்களை விட எப்பொழுதும் குறைந்தவர்கள் என்று அறிஞர்கள் சொல்வது பொய் என்கிறீர்களா
    --------

    ஆண்களை விட அறிவு திறனில் குறைந்தவர்கள் பெண்கள் என்று எந்தவொரு தெளிவான ஆதாரங்களின் அடிப்படையிலும் கருத்து கூறாத அறிவியலாளர்களை தான் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது கட்டுரை.

    இதையே //மனிதனுடைய புத்திசாலித்தனம், மூளையின் "frontal lobe" பகுதியை சார்ந்தே அமைந்திருக்கின்றது என சில விஞ்ஞானிகள் எண்ணினர். பின்னர், பெண்களுடைய frontal lobe பகுதி ஆண்களை விட பெரியது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தங்களுடைய எண்ணத்தை மாற்றி கொண்டனர். அதாவது, புத்திசாலித்தனதுக்கு Frontal Lobe காரணமல்ல, Parietal Lobe பகுதியே காரணமாக இருக்க வேண்டுமென்று தங்களது எண்ணத்தை மாற்றி கொண்டனர்.///

    இதற்கு என்ன ஆதாரம்? தங்கள் சுய எண்ணங்கள் தானே காரணம்? இல்லை தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்த கருத்துக்களா இவை? இதற்கு பேர் பொய் இல்லாமல் வேறு என்ன வார்த்தை சொல்ல முடியும்?

    இன்றைய அறிவியல் மூளை அளவுக்கும், அறிவுத்திறனுக்கும் சம்பந்தமில்லை என்று கூறுகின்றது. ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் சிலர் வேறு வகையாக பெண்களை தாழ்த்துகின்றனர் என்கின்றது கட்டுரை. அவர்களில் சிலருடைய கருத்தை தான் மேலே கூறினேன்.

    //அவர்கள் பிறப்பிலேயே அப்படித்தான்// என்று ஹார்வர்டின் லாரன்ஸ் கூறினாரே இதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? ஒரு அறிவியலாளர் இப்படித்தான் கருத்து கூறுவாரா? எந்த நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்த கருத்துக்கள் இவை?

    நான் பதிவில் கொடுத்துள்ள referenceகளை சற்று பாருங்கள். விஞ்ஞானிகள் சிலர் எந்த அளவு முட்டாள்தனமாக நடந்துள்ளனர் என்று தெரியும்.

    ----
    நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை
    ----

    தெளிவாகவே கூறியிருக்கின்றேன் என்று நினைக்கின்றேன். தங்களுக்காக இன்னொரு முறை // ஆணாதிக்கம்...ஆணாதிக்கம் என்று பெண்ணுரிமைக்காக கூப்பாடு போடும் பரிணாம ஆதரவாளர்கள், தற்போது அதி விரைவாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அந்த ஆணாதிக்கத்திற்கு அறிவியல் ரீதியாக தீனி போட்டு வளர்த்ததில் பரிணாம கோட்பாட்டிற்கு முக்கிய பங்குண்டு என்பதைத்தான்.// //பெண்ணுரிமை ஆர்வலர்கள் எதிர்த்து போராட வேண்டியது ஆணாதிக்க சமூகத்தை மட்டுமல்ல, அவர்களுக்கு துணை போய் கொண்டிருக்கும் ஆய்வாளர்களை எதிர்த்தும் தான்...///

    இதில் என்ன குழப்பம்?

    -----
    உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்
    ------

    இனியும் உங்களுக்கு விளக்கம் தேவைப்படுகின்றதா?

    நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல இறைவன் மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தருள்வானாக என்று பிரார்த்திக்கும்

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  22. பெண்கள் எடையிலும், வலிமையிலும்,திறமையிலும் ஆண்களைவிட குறைந்தவர்களா இல்லையா?ஆமாம், இல்லை என்று சொல்லுங்கள்.

    //இன்றைய அறிவியல் மூளை அளவுக்கும், அறிவுத்திறனுக்கும் சம்பந்தமில்லை என்று கூறுகின்றது.//

    அதாவது மூளையே இல்லை என்றாலும் அறிவு இருக்கும் என்கிறீர்களா.அல்லது சம்பந்தம் கொஞ்சமாவது இருக்குமா?

    ReplyDelete
  23. //பெண்களை சொந்தமாக்கி கொள்ள ஆதிகால ஆண்கள் போராடி வந்ததாக குறிப்பிடும் டார்வின், பெண்களை கவர வெறும் உடல் வலிமை மட்டும் போதாது என்பதால் காலப்போக்கில் ஆண்கள் அறிவுத்திறனில் வளர்ச்சியடைந்ததாக குறிப்பிடுகின்றார் (Sexual Selection Hypothesis).

    மேலும், தங்களுடைய மனைவியரை அடுத்தவர் கவருவதிலிருந்து காக்கவும், தன் குடும்பத்திற்கு தேவையான உணவையும் இடத்தையும் கொடுப்பதில் ஆண்கள் மும்முரமாக செயல்பட்டதால் அறிவிலும், உடல் வலிமையிலும் ஆண்கள் உயர்ந்தவர்களாக பரிணமித்து விட்டதாக கூறினார் டார்வின்.

    பெண்களுக்கு இந்த தேவைகள் இல்லாததால் அவர்கள் ஆண்களை விட தாமதமாகவே பரிணமித்ததாக குறிப்பிடுகின்றார் டார்வின்.//
    திரு ஆஷிக் அவர்களே உண்மைதான் அது, புறன காலத்தில் ஆண்கள் பெண்களை பாதுகாக்க வேண்டிய சொத்தாக வே பார்த்தான். அவர்களை தனக்கு சமமான ஒரு உயிரினமாக பார்கவில்லை. எனவே இந்த பரிணாமம் இயற்கை ஆனதுதான் முஹம்மத் நபியே தன்வயலுக்கு வேலி போடாதவன் வயலை ஆடு மாடு மேய்ந்து விடும் என்று மனைவியை பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் டார்வினாவது பரிநாமத்தினால் பெண்கள் பலவீனமானவர்களாக மாறியதாக கூறுகிறார் ஆனால் நபிகள் கடவுளே பெண்களை ஆண்கள் பாதுகாக்க வேண்டிய சொத்தாக அனுபியிருபதாக சொல்கிறார், இதில் யார் ஆணாதிக்கவாதி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். பரிநாமத்தினால் பலவீனமானவர்களை கால போக்கில் உளவியல் ரீதியாகவும் சமூக மாற்றத்தின் மூலமாகவும் பலசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் மாற்றி விடலாம். ஆனால் வசதியுள்ள ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் அவர்கள் அனைவரையும் ஒரே போல் நடத்துவது அவன் கடமை என்று சொன்னவரை பெண் விடுதலை பேசுபவர் என்றா சொல்ல முடியும்.

    ReplyDelete
  24. //பெண்களை சொந்தமாக்கி கொள்ள ஆதிகால ஆண்கள் போராடி வந்ததாக குறிப்பிடும் டார்வின், பெண்களை கவர வெறும் உடல் வலிமை மட்டும் போதாது என்பதால் காலப்போக்கில் ஆண்கள் அறிவுத்திறனில் வளர்ச்சியடைந்ததாக குறிப்பிடுகின்றார் (Sexual Selection Hypothesis).

    மேலும், தங்களுடைய மனைவியரை அடுத்தவர் கவருவதிலிருந்து காக்கவும், தன் குடும்பத்திற்கு தேவையான உணவையும் இடத்தையும் கொடுப்பதில் ஆண்கள் மும்முரமாக செயல்பட்டதால் அறிவிலும், உடல் வலிமையிலும் ஆண்கள் உயர்ந்தவர்களாக பரிணமித்து விட்டதாக கூறினார் டார்வின்.

    பெண்களுக்கு இந்த தேவைகள் இல்லாததால் அவர்கள் ஆண்களை விட தாமதமாகவே பரிணமித்ததாக குறிப்பிடுகின்றார் டார்வின்.//
    திரு ஆஷிக் அவர்களே உண்மைதான் அது, புறன காலத்தில் ஆண்கள் பெண்களை பாதுகாக்க வேண்டிய சொத்தாக வே பார்த்தான். அவர்களை தனக்கு சமமான ஒரு உயிரினமாக பார்கவில்லை. எனவே இந்த பரிணாமம் இயற்கை ஆனதுதான் முஹம்மத் நபியே தன்வயலுக்கு வேலி போடாதவன் வயலை ஆடு மாடு மேய்ந்து விடும் என்று மனைவியை பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் டார்வினாவது பரிநாமத்தினால் பெண்கள் பலவீனமானவர்களாக மாறியதாக கூறுகிறார் ஆனால் நபிகள் கடவுளே பெண்களை ஆண்கள் பாதுகாக்க வேண்டிய சொத்தாக அனுபியிருபதாக சொல்கிறார், இதில் யார் ஆணாதிக்கவாதி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். பரிநாமத்தினால் பலவீனமானவர்களை கால போக்கில் உளவியல் ரீதியாகவும் சமூக மாற்றத்தின் மூலமாகவும் பலசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் மாற்றி விடலாம். ஆனால் வசதியுள்ள ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் அவர்கள் அனைவரையும் ஒரே போல் நடத்துவது அவன் கடமை என்று சொன்னவரை பெண் விடுதலை பேசுபவர் என்றா சொல்ல முடியும்.

    ReplyDelete
  25. சகோதரர் சரவணன்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    -----
    திரு ஆஷிக் அவர்களே உண்மைதான்
    -----

    எப்படி? அறிவியல் ரீதியான ஆதாரங்களை கொடுங்கள். எந்த ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு ஆண்கள் பெண்களை விட அறிவில் சிறந்தவர்கள் என்று டார்வின் முதற்கொண்ட அறிவியலாளர்கள் கூறினர்? அந்த காலத்தில் எந்த மாதிரியான வாய்ப்புகளை அவர்கள் பெண்களுக்கு கொடுத்து விட்டார்கள்?

    ----
    இதில் யார் ஆணாதிக்கவாதி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
    ----

    இதில் என்ன குழப்பம். பெண்களை கீழ்த்தரமாக நடத்திய அறிவியலாளர்கள் தான் ஆணாதிக்கவாதிகள்.தன் மனைவியை "நாய்" என்று சொன்னவர் ஆணாதிக்கவாதியா? அல்லது தங்கள் பெண்களுக்கு பாதுகாவலர்களாக, அவர்களை நிர்வகிக்க கூடியவர்களாக இருந்தால் அவர்களுக்கு பெயர் ஆணாதிக்கவாதிகளா?

    முதலில் இந்த "சமம்" என்ற வார்த்தையே இஸ்லாத்தில் பொருத்தமில்லாதது. ஆண்களும், பெண்களும் வெவ்வேறானவர்கள். இல்லையென்றால் ஆண், பெண் என்று படைக்காமல் ஒரே இனத்தினரகாவே இறைவன் படைத்திருக்கலாமில்லையா?

    ----
    பரிநாமத்தினால் பலவீனமானவர்களை கால போக்கில் உளவியல் ரீதியாகவும் சமூக மாற்றத்தின் மூலமாகவும் பலசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் மாற்றி விடலாம்.
    -----

    எப்படி? அதுநேரம் ஆண்களும் அதே அளவு பரினமித்திருப்பார்களே? அந்த வேறுபாடு இருந்து கொண்டே தானே இருக்கும்? தெளிவாக விளக்குங்கள்...

    ReplyDelete
  26. ------
    ஆனால் வசதியுள்ள ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும்
    -----

    அறியாமையால் விளைந்த கருத்து. ஆதாரங்கள் ப்ளீஸ்...

    சகோதரரே, இஸ்லாம் குறித்த ஏதாவது விமர்சங்களை வைப்பீர்களானால் ஆதாரங்களை கொடுங்கள். நான் தெளிவான ஆதாரங்களை கொடுத்து தானே பதிவை எழுதியிருக்கின்றேன்? அதுபோல தாங்களும் குர்ஆனில் இந்த வசனத்தில் அப்படி சொல்லப்பட்டுள்ளது, ஹதீஸ்களில் அப்படி சொல்லப்பட்டுள்ளது என்று ஆதாரங்களை முன்வைத்தது வாதியுங்கள். இப்படி செய்தாலாவது குரானையும், ஹதீஸ்களையும் தாங்கள் படிப்பீர்கள் என்ற ஒரு சிறு ஆசைதான்.

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றி,

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் மகிழ்ச்சியை நிலைத்திருக்க வைப்பானாக...ஆமீன்..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  27. சகோதரர் ஆஷிக் அவர்களே, இஸ்லாத்தை குறித்து மாற்று கருத்து கொண்டவர்களுக்கும் இறைவன் அருள் இறங்க வேண்டிக்கொள்ளும் உங்கள் அன்பு உள்ளத்துக்கு நன்றி. விஞ்ஞானிகள் பண்டைய மனிதனின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு தான் அவ்வாறு கூறினார்கள். அவர்கள் பெண்களை இழிவு படுத்துவதற்காக என்று அப்படி சொல்ல வில்லை. மேலும் பரிணாமத்தின் கோட்பாடு என்பது நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று அல்ல. குரானை நான் படித்ததில்லை என்பது உண்மை தான், ஆனால் இஸ்லாமிய நண்பர் ஒருவர் என்னிடம் இஸ்லாத்தை குறித்து பேசும்போது சொன்ன கருத்துக்கள் இவை. குரானை படிக்கிற வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிப்பேன். விரைவில் ஆதாரங்களின் அடிப்படையில் சந்திக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  28. சகோதரர் சரவணன்,

    உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக,

    ----
    விஞ்ஞானிகள் பண்டைய மனிதனின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு தான் அவ்வாறு கூறினார்கள். அவர்கள் பெண்களை இழிவு படுத்துவதற்காக என்று அப்படி சொல்ல வில்லை.
    ----

    தவறு. பண்டைய மனிதனின் வாழ்வை எப்படி கணக்கிடுவது? இந்த விஞ்ஞானிகளின் காலத்தில் கூட பெண்களுக்கு எந்த மாதிரியான வாய்ப்புகளை அவர்கள் கொடுத்து விட்டனர்?

    ----
    உதாரணத்திற்கு, மனிதனுடைய புத்திசாலித்தனம், மூளையின் "frontal lobe" பகுதியை சார்ந்தே அமைந்திருக்கின்றது என சில விஞ்ஞானிகள் எண்ணினர். பின்னர், பெண்களுடைய frontal lobe பகுதி ஆண்களை விட பெரியது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தங்களுடைய எண்ணத்தை மாற்றி கொண்டனர். அதாவது, புத்திசாலித்தனதுக்கு Frontal Lobe காரணமல்ல, Parietal Lobe பகுதியே காரணமாக இருக்க வேண்டுமென்று தங்களது எண்ணத்தை மாற்றி கொண்டனர்.
    ----

    எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த கருத்தை வைத்தனர். இதற்கு பெயர் இழிவு இல்லாமல் வேறு எந்த வார்த்தை கொண்டு அழைப்பது?

    ----
    மேலும் பரிணாமத்தின் கோட்பாடு என்பது நடைமுறைக்கு ஒத்து வராத ஒன்று அல்ல.
    ----

    பரிணாமம் என்பது ஒரு பொய். அது குறித்து ஆதாரங்களுடன் பல பதிவுகள் இங்கு உள்ளது. படித்து விட்டு கருத்து சொல்லுங்கள் சகோதரரே.

    ----
    குரானை நான் படித்ததில்லை என்பது உண்மை தான், ஆனால் இஸ்லாமிய நண்பர் ஒருவர் என்னிடம் இஸ்லாத்தை குறித்து பேசும்போது சொன்ன கருத்துக்கள் இவை.
    ----
    உங்களை பற்றி ஒருவர் தவறாக சொன்னால் அவர் உங்கள் உறவினராக இருப்பதால் அவர் சொல்வது உண்மை என்று நான் நம்பிவிட முடியுமா? நான் தீர ஆராய வேண்டுமல்லவா? அது தானே தர்க்கரீதியான செயல்?

    ---
    குரானை படிக்கிற வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிப்பேன்.
    ----

    எதற்கு வாய்ப்புக்காக காத்திருக்கிண்றீர்கள்? வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்ளலாமல்லவா? ஒரே ஒரு மெயில் எனக்கு அனுப்புங்கள் (aashiq.ahamed.14@gmail.com). குரான் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை அனுப்பி வைக்கின்றேன்.

    ----
    விரைவில் ஆதாரங்களின் அடிப்படையில் சந்திக்கிறேன்.
    ----

    இன்ஷா அல்லாஹ வாருங்கள். இறைவன் உங்களுக்கு பதில் சொல்லுமளவு எனக்கு கல்வி ஞானத்தை கொடுத்தால் பதில் சொல்லுகின்றேன்.

    நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஏக இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் தந்தருள்வானாக...ஆமீன்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  29. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே..

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு..

    ஒரு பெண் என்பதால் படிக்கும் போது ஏற்பட்ட கோபம்

    உங்கள் தெளிவான பதிலால் மறைந்து விட்டது..


    உங்களின் பணி மென்மேலும் தொடர இறைவனிடம்

    பிரார்த்திக்கும் உங்கள் சகோதரி..

    ReplyDelete
  30. Hi Aashiq,

    Sexism did not exactly begin with Darwin!
    I also think you have a predilection for presentism- the state of projecting current moral standards or absolutes into the past and then judging a historical figure upon them. This is also called "Poisoning the Well", when is where adverse information about a target is presented to an audience with the intention of discrediting or ridiculing EVERYTHING that the target is about to say. It is a logical fallacy, a subset of the "Red Herring" fallacy.
    Not to mention the circular logic, misrepresentations, and outright lies presented in this blog.



    Darwin supposedly thought they were two different species yet was amazed so much difference could be within one species?
    Did he think they were one or different species?
    That statement right here invalidates any point afterwards.
    This argument is no different from saying Hitler was a Catholic so everything Catholics say is wrong.
    I think you don't understand the difference between someone's work and personal ideology. Though his ideas were brilliant, Charles Darwin, as a man, was a product of his time. He & most people of the time labored under the fundamental belief that women were inferior to men. It wouldn't matter if Darwin was the biggest misogynist the world has ever known, evolution is still valid. In addition, evolution is simply about how life changes over time, and has no ramifications on social sciences or gender studies other than what people themselves attribute it to. I respect his contribution to science, but I really don't have a problem with pointing out what he got wrong (Do you have guts to point out sexism in Islam). That's the beauty of science: it is self-correcting. I don't hold onto anything Darwin said with any amount of faith; I go out and learn new stuff and if that new stuff proves him wrong, that's just fine and dandy. In other words, the universal assumptions about men and women were in place long before Darwin, and were something he tried to explain with his theory ... they were not a (consequence) of it. Science community threw away the sexism, genetics and political ideology from Darwin's work but the same science community embraced Darwin's Evolution for it's validating evidence since 150 years.

    Next time, please concentrate on the issues within your religion: I will show the real women's rights in Islam (with proof) if you insist.
    Dare to question your medieval ideology.

    Thanks,
    Lord Voldemort.

    ReplyDelete
  31. அஸ்ஸலாமு அலைக்கும், பரினாமவாதிகளை இங்கே காணோம் .அவர்கள் உங்களது இந்த பதிவை காணவில்லையா?என்பது தெரியவில்லை .இருப்பினும் அவர்களுடைய தளங்களில் இந்த பதிவின் சுட்டியை பின்னூட்டம் இட்டுள்ளேன் .தாங்கள் இன்னும் கம்யுனிஸ்ட்களின் சோஷலிச காலத்தில் பெண்கள் உண்மை நிலை பற்றியும் கம்யுனிசம் சொல்லும் இல்லற வாழ்க்கை பற்றியும் நல்ல தேடல்கள் மூலம் இங்கே ஆய்வு கட்டுரைகளை பதிவு செய்யுங்கள் .மேலும் கம்யுனிச தலைவர்களின் தனி நபர் வாழ்க்கைபற்றியும் தாங்கள் அலசி பதிவு செய்து கம்யுனிசத்தின் தோலுரிக்க செய்யுங்கள் .இறைவன் அருள்புரிவானாக !

    ReplyDelete
  32. வ அலைக்கும் சலாம் இப்ராஹீம்,

    //பரினாமவாதிகளை இங்கே காணோம்///

    வந்து என்னத்தை சொல்லி விட போகின்றார்கள். முடிந்தால் வந்து மறுக்கட்டும். பார்ப்பாம்.

    //தாங்கள் இன்னும் கம்யுனிஸ்ட்களின் சோஷலிச காலத்தில் பெண்கள் உண்மை நிலை பற்றியும் கம்யுனிசம் சொல்லும் இல்லற வாழ்க்கை பற்றியும் நல்ல தேடல்கள் மூலம் இங்கே ஆய்வு கட்டுரைகளை பதிவு செய்யுங்கள் .மேலும் கம்யுனிச தலைவர்களின் தனி நபர் வாழ்க்கைபற்றியும் தாங்கள் அலசி பதிவு செய்து கம்யுனிசத்தின் தோலுரிக்க செய்யுங்கள்//

    இன்ஷா அல்லாஹ் செய்வோம் சகோதரர். துவா செய்யுங்கள்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  33. சகோதரரே அஸ்ஸலாமுஅலைக்கும் ,மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் நிலை என்ன? அவர் திருந்தி விட்டாரா? அல்லது நம் மக்கள் பழகி விட்டார்களா?விசாரித்து எழுதுங்கள் .அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹமதுல்லாஹி வ பரக்காதுஹு )

    ReplyDelete
  34. அந்த நேரத்துல அவருக்கு என்ன கஷ்டமோ தெரியல ..இதையெல்லாம் சொன்னதோடு நிறுத்தி இருக்கலாம் , எழுதி வச்சுகிட்டு போய் இப்படி மாட்டிகிட்டாரே பாவம் ....!!! :-)

    ReplyDelete
  35. அன்பிற்குரிய ஆஷிக்,

    மிகவும் நல்ல பதிவு. இதை எழுதியதில் அடங்கியிருக்கும் உங்கள் உழைப்பு சிலாகிக்கத்தக்கது. தொடருங்கள்.

    ReplyDelete
  36. அன்பிற்குரிய ஆஷிக்.

    மிகவும் அருமையான பதிவு. இதன் எழுதியதில் அடங்கியிருக்கும் தங்களுடைய உழைப்பு சிலாகிக்கத்தக்கது. தொடருங்கள்.

    ReplyDelete
  37. அன்புக்குரிய சகோதரரே உங்கள் ஆய்வுகளால் உங்கள் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன் .உங்களுடைய முயற்சி நிச்சயமாக எங்கலை போன்ற இளைஞ்சர்களுக்கு ஒரு வழிகாட்டுதல் உங்கள் ஆய்வுகளை மேலும் தொடருங்கள் .அலாஹ் துணை இருப்பான் . ஜஸகல்லாஹூ ஹைர்

    ReplyDelete